போலந்து நாட்டில் மனைவியை சூட்கேசில் அடைத்து வைத்து கடத்த முயன்ற கணவர் ரயில் நிலையத்தில் சிக்கினார். போலந்து நாட்டில் பெலாரஸ் எல்லையில் உள்ள தெரஸ்போல் ரயில் நிலையத்துக்கு ஒருவர் மிகப் பெரிய சூட்கேசை எடுத்து வந்தார். அதைப் பார்த்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அது குறித்து விசாரித்தனர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த சூட்கேசைத் திறந்து பார்த்தனர். உள்ளே 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். உயிருடன் இருந்த அவரைக் கண்டு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்த அதிகாரிகள் அவர் குறித்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் கணவன், மனைவி என்றும் ஆண் பிரான்ஸையும், பெண் ரஷியாவையும் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இவர்கள் போலந்தில் இருந்து பெலாரஸ் செல்ல முயன்றனர். மனைவிக்கு பாஸ்போர்ட் இல்லாததால், கணவர் அவரை சூட்கேசில் வைத்து கடத்தியது தெரிய வந்தது.
மனைவியை சூட்கேஸில் வைத்து கடத்த முயன்ற கணவர் சிக்கினார்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

