புது தில்லி: உங்கள் இருவரையும் விரைவில் சந்திக்கிறேன் என்று போர்க்கொடி உயர்த்தியுள்ள பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் இருவருக்கும் தில்லி முதல்வர் கேஜ்ரிவால் பதிலளித்துள்ளார். தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சந்திக்க சில தினங்களுக்கு முன் யோகேந்திர யாதவ் மற்றும் பிரசாந்த் பூஷன் விருப்பம் தெரிவித்து இருந்த நிலையில், விரைவில் சந்திக்கவுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான யோகேந்திர யாதவ் மற்றும் பிரஷாந்த் பூஷன் ஆகியோர் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். இதனால் கட்சியில் இருந்து இரு தலைவர்களும் ஓரங்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று பிரஷாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகிய இரு தலைவர்களின் சார்பில் கேஜ்ரிவாலுக்கு எஸ்.எம்.எஸ் ஒன்று அனுப்பபட்டது. இதற்கு பதிலளித்த கேஜ்ரிவால் இருவரையும் விரைவில் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
விரைவில் சந்திக்கிறேன்: பிரசாந்த் பூஷனுக்கும் யோகேந்திர யாதவுக்கும் கேஜ்ரிவால் பதில்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

