
ஈரானை பங்கம் செய்துவருகிறது இஸ்ரேல். இஸ்ரேலின் 200 போர் விமானங்கள் ஈரானின் 300க்கும் மேற்பட்ட இடங்களை தகர்த்தெறிந்திருக்கிறது. அதோடு, இராணுவ தலைவர்களை போட்டுத் தள்ளியிருக்கிறது. இப்போது தளபதிகள் இல்லாத படைப் பிரிவுகளோடு திணறிவருகிறது ஈரான்.
ஈரானிலிருந்து அணுப்பப் பட்ட டுரோன்கள் அத்தனையும் இஸ்ரேலைச் சென்றடையும் முன்னே சுட்டு வீழ்த்தப் பட்டிருக்கின்றன – ஈராக் உள்ளிட்ட பல நாடுகளால்.
இஸ்ரேலை கடுமையாக எதிர்க்கும் ஃபிரான்ஸின் மாக்ரோன் உட்பட பல நாடுகள், “இஸ்ரேலுக்கு தற்காப்பு உரிமை உண்டு. ஈரான் அணு ஆயுதத்தை கைவிட வேண்டும்” என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள்.
சமீபகாலமாக இஸ்ரேலை புறக்கணித்தும் ஈரானுக்கு நெருக்கம் காட்டியும் வந்த டிரம்ப் இன்று சொல்லியிருக்கிறார், “இஸ்ரேல் ஈரானைத் தாக்குவதை எங்களிடம் சொல்லிவிட்டுத் தான் செய்தது. ஈரான் அடங்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
மத்திய கிழக்கின் சவுதி, ஐக்கிய எமிரேட் உள்ளிட்ட நாடுகள் வழக்கம் போல ‘இஸ்ரேலை கண்டித்’திருக்கின்றன. ஹமாஸை இஸ்ரேல் துவம்சம் செய்த போதும் இதே போலத் தான் இந்த நாடுகள் ‘இஸ்ரேலை கண்டித்’தன… எல்லாம் புருடா!!
இரு நாடுகளும் நட்பு என்பதால் பாரதம் வழக்கம் போல, ‘ரெண்டு பேரும் சண்டை போடாதீங்கப்பா. அமைதியா இருங்க’ என்று அறிக்கை விட்டிருக்கிறது. சீனா திணறி வருகிறது. அதன் சீன ஊழியர்கள் பலரும் ஈரானில் சிக்கியிருப்பதால் அவர்களை எப்படி வெளியே கொண்டு வருவது என்று திணறுகிறது சீனா….
இப்படி சீனா தவிர அத்தனை நாடுகளும் ஈரானைக் கை கழுவி விட்டிருக்கின்றன. என்றாலும்… இதில் ஹைலைட் ரஷ்யா தான்!!
சென்ற வாரம் ரஷ்யா அறிக்கை விட்டிருந்தது, “ஈரான் மீது கை வைத்தால் விபரீத விளைவுகளை சந்திப்பீர்கள்” என்று. என்றாலும், இன்று ஈரானை புரட்டி எடுக்கும் போது, ஒன்றுமே தெரியாதது போல இருக்கிறது ரஷ்யா.
இதே போலத் தான் சிரியாவில் ஆளும் ரஷ்ய ஆதரவு அஸ்ஸாத் ஆட்சியை பயங்கரவாதிகள் வீழ்த்திய போதும் ரஷ்யா ஒன்றும் சொல்லவில்லை. சத்தம் போடாமல் சிரியாவில் இருந்த ரஷ்ய துருப்புகளை திரும்பப் பெற்றது ரஷ்யா. பயங்கரவாதிகள் ரஷ்ய துருப்புகளை தாக்காததையும் கவனிக்கவும்.
“எதனால் ரஷ்யா அமைதி காக்கிறது?” என்ற கேள்விக்கு சிலர், “யுக்ரைனின் கிழக்குப் பகுதியை ரஷ்யா எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படும். அதற்கு ஈடாக ஈரான், சிரியா போன்ற நாடுகளுக்கு ஆதரவு தருவதை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று டீல் பேசப்பட்டு, அதை ரஷ்யா ஒப்புக் கொண்டதால் தான் இன்று ரஷ்யா மௌனம் காக்கிறது” என்கிறார்கள்.
சிரியா, ஈரான், ஹமாஸ், ஹெஸ்புல்லா எல்லாம் வழிக்குக் கொண்டு வரப்பட்டால், பயங்கரவாதம் பெருமளவில் ஒழியும். (பாக் மட்டும் பயங்கரவாதத்தை தொடரும்).
ஈரானில் அணு ஆயுதம் இருக்கிறது என்று 80களிலிருந்தே குற்றம் சாட்டி வருகிறது அமெரிக்கா. நேற்று சர்வதேச அணு (International Atomic Energy Agency – IAEA) அமைப்பு, “ஈரானில் அணு ஆயுதம் இருக்க வாய்ப்பு” என்று சொன்னது. இன்று அதே IAEA, “இஸ்ரேல் தாக்குதலுக்குப் பின் கதிரியக்க கசிவு ஏதும் ஏற்படவில்லை” என்று சொல்லியிருக்கிறது.
ஈரானில் உண்மையில் அணு ஆயுதம் இருந்ததா என்பது கேள்விக்குறி. இதே போலத் தான் சதாம் ஹுசைனையும் போட்டுத் தள்ளினார்கள்.
- செல்வநாயகம்





