கொரோனா: மீண்ட மருத்துவருக்கு மீண்டும் தொற்று!

corono medicine

நொய்டாவில் மருத்துவர் ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்டு 45 நாள்களுக்குப் பின் மீண்டும் அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கௌதம் புத் நகர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவருக்கு பல முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, அதில், அவருக்கு இரண்டாவது முறை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகள் நல மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் பணியாற்றி வந்த மருத்துவருக்கு கடந்த மே மாதம் 15ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 15 நாள்கள் சிகிச்சை பெற்று மே 30-ம் தேதி கொரோனா இல்லை என்பது இரண்டு முறை உறுதி செய்யப்பட்ட பிறகு அவர் வீட்டுக்கு வந்து இரண்டு வாரங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். பிறகுதான் அவர் மீண்டும் பணிக்கு வந்தார்.

இந்த நிலையில், பணிக்குச் சேர்ந்த இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில், அவருக்கு திடீரென மயக்கம் ஏற்படுவதை உணர்ந்தார். ஆனால் காய்ச்சலோ இருமல் போன்ற அறிகுறிகளோ தென்படவில்லை.

முன்னெச்சரிக்கையாக, அவருடன் பணியாற்றிய மருத்துவர்கள் அவரது சளி மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. பிறகு அதனை உறுதி செய்ய மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டு, அப்போதும் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், இரண்டாவது முறை கொரோனா பாதிப்பது என்பது வெகு அரிது, ஒரு வேளை அவர் முதல் முறை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் போது முழுமையாகக் குணமடையாமல் இருந்திருக்கலாம்.

ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் போது அவர்களது உடலில் தோன்றும் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக, இரண்டாவது முறை நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. சிலருக்கு அந்த நோய் எதிர்ப்பு சக்தி விரைவாகவே குறைந்து விடும் போது இவ்வாறு நேரிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories