கட்டுப்பாட்டை மீறி நடந்த இரவு பார்ட்டி! போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றதில் 13 பேர் உயிரிழப்பு!

night-party

பெரு நாட்டில் கட்டுப்பாடுகளை மீறி நடந்த இரவு பார்ட்டியில் திடீரென காவல்துறை ரெய்ட் நடத்திய போது தப்பி ஓட முயன்ற 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை இரவு லிமாவின் லாஸ் ஒலிவோஸ் மாவட்டத்தில் உள்ள தாமஸ் ரெஸ்டோபார் கிளப்பில் கட்டுப்பாடுகளை மீறி இரவு பார்ட்டி நடந்துள்ளது.

அருகாமையில் இருந்த மக்கள் இரவு பார்ட்டி நடப்பது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவயிடத்திற்கு விரைந்த சுமார் 60 போலீசார் திடீர் சோதனைில் ஈடுபட்டனர், மேலும் பார்ட்டியில் கலந்துக்கொண்ட நபர்களை வெளியேற்ற முயன்றுள்ளனர்.

இரவு பார்ட்டியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் சுமார் 120 பேர் போலீஸ் வருவதை கண்டவுடன் அங்கிருந்த ஒரே ஒரு நுழைவு வாயில் வழியாக தப்பி ஓட முயன்றுள்ளனர்.

இதன் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர், மூன்று போலீஸ் அதிகாரிகள் உட்பட குறைந்தது 6 பேர் காயமடைந்தனர். .

இறந்த 13 பேரில் 11 பேர் கொரோனா உறுதியானதாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், போலீஸாரால் கைது செய்யப்பட்ட 23 பேரில் 15 பேருக்கு கொரோனா உறுதியானதாக ஜனாதிபதி மார்ட்டின் விஸ்கர்ரா தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட 13 பேர் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 12 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என்று அரசு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெளிவுபடுத்தினர்.

பெரு மார்ச் மாதத்தில் இரவு விடுதிகள் மற்றும் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதுடன், ஆகஸ்ட் 12 ஆம் தேதி நீட்டிக்கப்பட்ட குடும்பக் கூட்டங்களுக்கு தடை விதித்தது. ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவும் அமலில் உள்ளது.

கிளப்பின் உரிமையாளர்கள் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் போலீசார் கண்ணீர்ப்புகை அல்லது துப்பாக்கிகளைப் பயன்படுத்தவில்லை என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories