December 5, 2025, 1:58 PM
26.9 C
Chennai

ஜோ பிடனுடன் மட்டுமல்ல… டிவிட்டருடனும் மல்லுக்கட்டும் டிரம்ப்!

trump-us
trump-us

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீர் பேட்டி அளித்துள்ளார். அதுவும், அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பேட்டி அளித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது… தேர்தலில் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி! பெரிய கொண்டாட்டத்திற்காக காத்திருக்கிறோம். தேர்தல் முடிவுகள் சாதகமாக வந்து கொண்டு இருக்கின்றன. மக்கள் பல சாதனைகளை முறியடிக்கும் விதத்தில் வாக்களித்து உள்ளனர்….

ALSO READ: ட்ரம்ப் வெற்றி பெற வேண்டி… அனுமன் கோயிலில் அர்ஜுன் சம்பத் வழிபாடு!

பைடனால் என்னை வெற்றி கொள்ள முடியாது. புளோரிடா மாகாணத்தில் எதிர்பாராத அளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. எதிர்பாராத மாகாணங்களில் கூட வெற்றி கிடைத்துள்ளது. டெக்சாசில் 7000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்துள்ளது. இந்த முறை ஆதரிப்போரின் எண்ணிக்கை மிக அதிகரித்துள்ளது. இந்த தேர்தலில் தனித்துவமான வெற்றியை பெற்றுள்ளோம்… என்று கூறினார் டிரம்ப்.

அதுவும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் வெற்றி என டிரம்ப் பேட்டி அளித்தது பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

trumptweet
trumptweet

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.270 இடங்களை கைப்பற்றினால் ஆட்சியை பிடிக்கலாம் என்ற நிலையில், கடைசியாகக் கிடைத்த நிலவரப்படி, ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் 238 இடங்களையும் குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்ப் 213 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் சில இடங்களில் எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், டிரம்ப் வெற்றித் தெம்புடன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

ALSO READ : இழுபறிதான்.. ஆனாலும் ட்ரம்ப் மீண்டும் அதிபராவார்! ஜோதிடர் பச்சைராஜென் கணிப்பு!

மேலும், அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘நாம் மாபெரும் வெற்றியை எதிர் நோக்கியுள்ளோம். ஆனால் அவர்கள் தேர்தலில் சதி செய்ய முயற்சிக்கின்றனர்.ஒருபோதும் அவர்கள் சதி செய்ய விடமாட்டோம். வாக்குச் சாவடிகள் மூடப்பட்ட பிறகு வாக்களிக்க முடியாது!’ என பதிவிட்டிருந்தார்.

தேர்தல் வாக்குப் பதிவுகள் நிறைவுற்று, எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், ட்ரம்பின் இப்பதிவை ட்விட்டர் அதிரடியாக நீக்கியுள்ளது. “இந்த ட்விட் ட்விட்டரின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணானது. இது தேர்தல் செயல்பாட்டை தவறாக வழிநடத்தக் கூடும்” என்று ட்விட்டர் விளக்கம் அளித்துள்ளது.

இப்போது இதற்கும் சேர்த்து டிவிட்டருடன் மல்லுக்கட்டி வருகின்றனர் டிரம்ப் ஆதரவாளர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories