நியூஸிலாந்தில்… சம்ஸ்க்ருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்த இந்திய வம்சாவளி எம்.பி.,!

gaurav-sharma-newzealand
gaurav-sharma-newzealand

நியூசிலாந்தில் எம்.பி.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில், அந்நாட்டின் எம்.பி.,யாக தேர்வாகியுள்ள இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் கௌரவ் சர்மா சம்ஸ்கிருதத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

நியூசிலாந்தில் நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பாக போட்டியிட்ட டாக்டர் கௌரவ் சர்மா அந்நாட்டின் மேற்கு ஹாமில்டன் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.,யானார். இதை அடுத்து புதன் கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் எம்.பி., டாக்டர் கௌரவ் சர்மா சமஸ்கிருத மொழியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

அவரது பதவிப் பிரமாணம் குறித்து கருத்து தெரிவித்திருந்த நியூசிலாந்துக்கான இந்திய தூதர் முக்தேஷ் பர்தேசி, அவர் முதலில் நியூசிலாந்தின் மிகப் பழைமையான மொழியான மாவோரியிலும் பின்னர் இந்தியாவின் மிகப் பழைமையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

33 வயது நிரம்பிய கௌரவ் சர்மா நாவ்டானில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது பேஸ்புக் பதிவில், ‛நான் சமஸ்கிருதத்தை ஆரம்பம் மற்றும் இடைநிலை பள்ளிப் பருவத்திலிருந்து கற்று வருகிறேன். சமஸ்கிருதம் 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதிலிருந்து தான் எல்லா இந்திய மொழிகளும் தோன்றின’ என்று பதிவிட்டிருந்தார்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

அவர் ஏன் ஹிந்தியில் அல்லது பஞ்சாபியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை என்று சிலர் அவருக்கு கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்த கௌரவ் சர்மா, நான் ஒரே நேரத்தில் எல்லோரையும் சந்தோஷப் படுத்த முடியாது. எனவே தான், பாரதத்தின் மிகப் பழைமையான மொழியான சம்ஸ்க்ருதத்தில் பதவிப் பிரமாணம் ஏற்று இந்தியர்கள் அனைவரையும் மகிழ்ச்சிப் படுத்தியுள்ளேன் என்று குறிப்பிட்டார்.

கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோற்ற டாக்டர் கௌரவ் சர்மா, இப்போது வென்றிருக்கிறார். முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், நியூசிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர், இந்தியாவில் பிறந்து, சிங்கப்பூரில் பள்ளிக் கல்வி கற்று, பின்னர் நியூஸிலாந்துக்கு குடி பெயர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Topics

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories