காதலியின் கழுத்தை அறுத்து இணையத்தில் பகிர்ந்த காதலன்!

Brandon Clark - 2026

நியூயார்க்கில் 17 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 22 வயது இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் Bianca Devins என்ற 17 வயது சிறுமி. இவரும் நியூயார்க்கை சேர்ந்த Brandon Clark என்ற 22 வயதான இளைஞரும் இணையம் மூலமாக சந்தித்து நண்பர்கள் ஆனவர்கள்.

இந்நிலையில் இருவரும் இசை நிகழ்ச்சிக்கு ஒன்றாக சென்றுள்ளனர். அங்கு Bianca தனது மற்றொரு நண்பர் Alex-ற்கு முத்தம் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த Brandon ஆத்திரத்தில் இருந்துள்ளார். பின்னர் காரில் வீடு திரும்பியபோது Brandon நீ ஏன் அவனுக்கு முத்தமிட்டாய் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று Bianca பதில் அளித்துள்ளார்.

இந்த பதில் Brandon-ஐ ஆத்திரமடையச் செய்துள்ளது. திடீரென்று Brandon காரில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து Bianca-வின் தொண்டையில் பலமாக குத்தியுள்ளான். இதனால் Bianca-வின் தலை கிட்டத்தட்ட உடலில் இருந்து தனியாக வெளியே வந்துவிட்டது.

இதற்கிடையில் Bianca-வை காணவில்லை என்று காவல்துறையினர் நீண்ட நேரமாக தேடிக்கொண்டிருந்தபோது அவர்களுக்கு Brandon போன் செய்துள்ளான்.

பின்னர், ” நான்தான் Brandon Clark. நான் எனது காதலியை கொன்று விட்டேன். நீங்கள் என்னை பார்க்க வரும்போது என்னுடைய உயிரற்ற உடல் தான் கிடைக்கும்” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளான்.

இந்த அழைப்பை டிரேஸ் செய்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கு Bianca கழுத்து அறுபட்டு உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். அவருக்கு பக்கத்திலேயே Brandon ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளான்.

Bianca Devins - 2026

காவல்துறையினர் உடனடியாக Brandon-ஐ மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் அவன் பிழைத்துக் கொண்டான். இந்நிலையில் நேற்று முன்தினம் Brandon-க்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

குறைந்தது 25 வருடமாவது Brandon சிறையில் நாட்களை கழிக்க வேண்டியிருக்கும். மேலும் Bianca கழுத்தறுப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்கும் காட்சிகளை Brandon இணையத்தில் பதிவேற்றியுள்ளான்.

இந்த பதிவு இணைய பயனர்களால் மிக வேகமாக பகிரப்பட்டது. இதனால் காவல்துறையினர் பயனர்களிடம் Bianca இறந்து கிடக்கும் படங்களை பகிராதீர்கள் என்று கேட்டுக் கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories