ஜப்பானில் நிலநடுக்கம்: கடலோரத்தில் சுனாமி எச்சரிக்கை!

Published:

earthquake
earthquake

ஜப்பானின் வடகிழக்கு கடலோர பகுதிகளை உலுக்கி எடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை பேரிடர்களால் ஜப்பான் அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று ஜப்பானின் வடகிழக்கு கடலோர பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஜப்பானின் கிழக்கு கடலோர பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தலைநகர் டோக்யோவில் நிலநடுக்கம் மிக பலமாக உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்படி, இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளிக்கு அருகேதான் 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 18,000க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து நில அதிர்வுகள் நீடித்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு ஜப்பானில் உள்ள டொஹோகு பகுதியில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

நிலநடுக்கத்தால் சில பகுதிகளில் வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்ததாக லோக்கல் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக, கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img