சுவருக்குள் இருந்து வந்த அலறல்! நிர்வாண நிலையில் மாட்டிக் கொண்ட பெண்! பிறகு..?!

Published:

woman in between walls - 2026

சுவருக்குள்ளிருந்து பெண்ணின் அலறல். விசித்திரமான நிகழ்வுகள் உலகில் அவ்வப்போது நிகழ்கின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவை திடீரென வெளிவருகின்றன. அவற்றை நேராக கண்ணால் பார்க்காவிட்டால் நம்புவது கூட கடினம்.

இதுபோன்ற ஒரு சம்பவத்தைப் பற்றி இப்போது அறிந்து கொள்வோம்.

ஒரு பெண் இரண்டு கட்டிடங்களுக்கு இடையில் 8 அங்குல இடைவெளியில் சிக்கி நரக வேதனை அடைந்தார். அந்தப் பெண்ணை தீயணைப்பு வீரர்கள் மீட்டபோது ​​அவரது நிலையைப் பார்த்து உள்ளூர்வாசிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்தது.

கலிபோர்னியாவின் ஹார்பர் பௌலேவார்ட் சாலையில்.. கார் ஸ்டீரியோ கடையின் சுவருக்கும் ஆட்டோ கடையின் சுவருக்கும் இடையில் ஒரு பெண் சிக்கிக் கொண்டார்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

வழக்கம் போல கடை ஊழியர்கள் தங்கள் வேலையில் மும்முரமாக இருந்தார்கள். மதியம் இரண்டு மணியளவில் சுவரில் இருந்து விசித்திரமான சத்தம் கேட்டது. கூர்மையாக செவி கொடுத்துக் கேட்ட போது ஒரு பெண்ணின் அழுகுரல் போலிருந்தது.

இந்த விவகாரம் உடனடியாக போலீசில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கார் ஸ்டீரியோ கடையின் மாடிக்குச் சென்று கீழே பார்த்தார்கள். இரு கடைகளின் இடைவெளிக்கு நடுவில் ஒரு பெண்ணை நிர்வாணமாகக் கண்டு வியந்தனர். அந்தப் பெண் கடுமையான வேதனையில் இருந்தார். உடனடியாக மீட்புக் குழு மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இரண்டரை மணி நேரம் மீட்பு நடவடிக்கைக்குப் பின் அந்தப் பெண்ணை பாதுகாப்பாக சுவரில் இருந்து வெளியேற்றினர்.

உண்மையில் ஏன் சுவரில் சிக்கிக்கொண்டார்? நிர்வாணமாக இருப்பதற்கான காரணம் என்ன? இப்போது அப்பெண்ணின் நிலை எப்படி இருக்கிறது? இந்த விஷயங்கள் இன்னும் புதிராகவே உள்ளன. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வைரலாகி வரும் வீடியோ இதோ…

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img