போர்ட் லூயிஸ்: மொரீஷியஸ் நாட்டில் ஹிந்துக்களின் புனித இடமாகக் கருதப் படும் கங்கா தலாவ் தலத்தில் மோடி வழிபாடு நடத்தினார். அங்கிருக்கும் சிவன் கோயிலில் தனது பிரார்த்தனையைச் செய்தார் மோடி. முன்னதாக, மொரீஷியஸ் வளர்ச்சிக்கு துணை நிற்போம் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசினார். மேலும் மொரீஷியஸ் , இந்தியாவின் உறவு பாரம்பரியமாக இருந்து வருகிறது. இந்தியாவிலும், மொரீஷியஸிலும் சபாநாயகரை மேடம் என்று அழைப்பதில் நான் பெருமை கொள்கிறேன். ஜனநாயகத்தின் மாண்பைக் காப்பதில் இரு நாடுகளுக்கும் ஒற்றுமை உண்டு. மொரீஷியஸ் நாட்டு வளர்ச்சியில் இந்தியா எப்போதும் துணையாக இருக்கும் என்று பிரதமர் பேசினார்.
At the Ganga Talao I felt a deeply personal connect…one that comes from the banks of the Ganga in Varanasi. pic.twitter.com/zfnXOy7yxN — Narendra Modi (@narendramodi) March 12, 2015


