5 வருடமாக ராஜபட்சவால் முடியாதது சிறீசேனவால் 2 வாரத்தில் நிறைவேற்றம்: ரணில்

Published:

கொழும்பு: 5 வருடங்களில் மகிந்த ராஜபட்ச அரசால் முடியாததை கடந்த 2 வாரங்களில் மைத்ரி சிறீசேன அரசு நிறைவேற்றியுள்ளது என்று கூறினார் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க. இங்கே போர் நிறைவடைந்த பின்னரும் முந்தைய அரசினால் 5 வருடங்களாக அரசு ஊழியர்கள் உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு வழங்க முடியாமல் போன பல நிவாரணங்களை தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறீசேனவின் தலைமையிலான அரசு, ஆட்சிப் பொறுப்பை ஏற்ற இரு வாரங்களிலேயே வழங்கியுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை அவையில் தெரிவித்தார். மேலும், மகிந்த ராஜபட்ச ஆட்சியில் ஏன் இதனைச் செய்ய முடிந்திருக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இலங்கை நாடாளுமன்றத்தில் 23 (2) ஆம் எண் விதியின் கீழ் எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசியபோது, பிரதமர் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.

Related articles

Recent articles

spot_img