100ஐக் கடந்த பதக்கங்கள்: இந்திய வீரர்களின் சாதனை; பிரதமர் மோடி பாராட்டு!

asian games india medals - 2026
#image_title

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 100 பதக்கங்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இந்தியா இதுவரை 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 100 பதக்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது. 100 பதக்கங்களை வாங்கிக் குவித்து, நாட்டுக்குப் பெருமை தேடித் தந்து, வரலாற்று சாதனை படைத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

19வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தற்போது நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில், ஒவ்வொரு நாளும் இந்திய வீரர்கள் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.

வில்வித்தைப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது. தென்கொரிய வீராங்கனையை 149- 145 என்ற புள்ளிகளில் வீழ்த்தி ஜோதி தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா இதுவரை 3 தங்கப் பதக்கம் வென்றுள்ளார். வில்வித்தை போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை அதிதி சுவாமி வெண்கலம் வென்றார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்திய வில்வித்தை வீரர்கள் ஓஜாஸ் பிரவீன் தங்கமும், அபிஷேக் வர்மா வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

மகளிர் கபடிப் போட்டியில் சீன தைபே அணியை 26-24 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிள் கபடி அணி தங்கம் வென்றது.

இதை அடுத்து இந்தியா இதுவரை 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 100பதக்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது.

பிரதமர் மோடி வாழ்த்து

இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதனை. 100 பதக்கங்கள் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதில் இந்திய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவிற்கான இந்த வரலாற்று மைல்கல்லுக்கு வழிவகுத்த நமது அற்புதமான விளையாட்டு வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரமிக்க வைக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் சரித்திரம் படைத்து, நம் இதயங்களை பெருமையால் நிரப்பியது. வரும் 10ம் தேதி நமது விளையாட்டு வீரர்களுடன் உரையாடுவதற்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டி – 13ஆம் நாள் முடிவுகள்

  1. ஹாக்கி: ஆடவர் ஹாக்கியில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது
  2. ஆடவர் ரிகர்வ் வில்வித்தை அணி இறுதிப் போட்டியில் கொரியாவிடம் இந்தியா தோல்வியடைந்து வெள்ளி வென்றது
  3. பிரிட்ஜ்: ஹாங்காங் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி 12-17 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளி வென்றது.
  4. வில்வித்தை: மகளிருக்கான ரிகர்வ் டீம் பிரிவில் இந்தியா வியட்நாமை வீழ்த்தி வெண்கலம் வென்றது
  5. பேட்மிண்டன்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் தோல்வியடைந்த ஹெச்எஸ் பிரணாய் வெண்கலம் வென்றார்.
  6. மல்யுத்தம்: பெண்களுக்கான 76 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் தாய்லாந்தின் அரிஞ்சர்கல் கன்பத்தை வீழ்த்தி கிரண் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  7. பெண்களுக்கான 62 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் சோனம் சீனாவின் ஜியா லாங்கை தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
  8. ஆண்களுக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் சீனாவின் மிங்கு லியுவை 11-0 என்ற கணக்கில் வீழ்த்தி அமான் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  9. செபக்டக்ரா: பெண்கள் ரெகு அரையிறுதியில் இந்தியா, தாய்லாந்திடம் தோல்வியடைந்து வெண்கலம் வென்றது.
  10. கேனோ ஸ்லாலோம்: விஷால் கேவாட் 134.15 நேரத்துடன் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
  11. கபடி: பெண்களுக்கான அரையிறுதியில் நேபாளத்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது
  12. ஆடவர் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது
  13. ஆடவருக்கான 65 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் பஜ்ரங் புனியா 1-8 என்ற கணக்கில் ஈரானின் ரஹ்மான் அமுசாத்கலிலியிடம் தோற்றார்.
  14. சாப்ட் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவு எஃப் 1 வது ஆட்டத்தில் இந்தியாவின் ராகா ஸ்ரீ குழந்தைவேலு கம்போடியாவின் கி மெங்சௌங்கை தோற்கடித்தார்.
  15. கிரிக்கெட்: ஆடவர் அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா, இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது.
ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories