December 6, 2025, 7:57 PM
26.8 C
Chennai

கத்தாரில் தண்டனையில் இருந்து தப்பி இந்தியா திரும்பிய 8 பேர்; பிரதமர் மோடிக்கு நன்றி!

india and qatar news - 2025
#image_title

கத்தாரில் உளவு பார்த்ததாகக் கூறி சிறைபிடிக்கப்பட்ட முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் எட்டு பேர் விடுதலையாகி இன்று காலை புதுதில்லி வந்தனர். அவர்கள் தங்கள் விடுதலைக்காக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.

கத்தாரில், தங்கள் நாட்டை உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டி, எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை கைது செய்தது. அவர்களை கடந்த 18 மாதங்களாக கத்தார் தடுப்பு காவலில் வைத்திருந்தது.

அவர்களை விடுதலை செய்ய, இந்திய அரசு தீவிர முயற்சி எடுத்தது. இந்திய வெளியுறவுத்துறை கத்தார் நாட்டிடம் நடத்திய பேச்சு வார்த்தையின் வெற்றியாக, எட்டு முன்னாள் கடற்படை வீரர்களையும் கத்தார் விடுதலை செய்தது. இதை அடுத்து, புதுதில்லி வந்த கடற்படை வீரர்கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவி்த்தனர்.

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களுக்கும் விடுதலை கொடுத்தது கத்தார் அரசு! இது, இந்திய அரசின் ராஜதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அழுத்தத்தால் கத்தாரில் பணி புரிந்த 8 இந்தியர்களை சிறையிலடைத்தது கத்தார் அரசு. 8 பேரும் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.

ஹமாஸ் அக்டோபர் 7ம் தேதி, இஸ்ரேலில் வெறியாட்டம் போட்டதை கண்டித்த இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக கத்தார் அரசு இந்த 8 பேருக்கும் அக்.26ல் மரண தண்டனை விதித்தது. இதை அடுத்து கத்தார் அரசுடன் இந்திய வெளியுறவுத்துறை தொடர்ந்து போராடி வந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பரில் கத்தார் இளவரசரை துபாயில் சந்தித்தார் பிரதமர் மோடி. அப்போது இரு தரப்பு உறவுகள் குறித்து பேசப்பட்டது.

இதைத் தொடர்ந்து எட்டு பேருக்கான மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில், கத்தாரிலிருந்து வாங்கும் எரிவாயுவை மொசாம்பிக் உள்ளிட்ட இடங்களிலிருந்து வாங்க பாரத அரசு நடவடிக்கை எடுத்தது.. இந்நிலையில், கத்தார் நாடு அந்த எட்டு பேருக்கும் விதிக்கப்பட்ட மரணதண்டனையில் இருந்து விடுவித்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories