December 5, 2025, 10:42 PM
26.6 C
Chennai

அவசர நிலைப் பிரகடனம் விலக்கிக் கொள்ளப் படுவதாக அதிபர் சிறீசேன அறிவிப்பு

sirisena - 2025

கொழும்பு: இலங்கையில் நடைமுறைப் படுத்தப் பட்டிருந்த அவசரநிலைப் பிரகடனம் விலக்கிக் கொள்ளப் படுவதாக இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேன அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த ஓர் ஆண்டாக பெரும்பான்மையினரான புத்த மதத்தினருக்கும், சிறுபான்மையினரான இஸ்லாமியருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இஸ்லாமியர்கள் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது அங்கே பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது. மேலும், புத்த மதம் தொடர்பான பழங்கால அடையாளங்கள், தொல்பொருள் இடங்களை இஸ்லாமியர்கள் சேதப்படுத்தி வருவதாக புத்த மதத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அண்மையில் மியான்மரில் புத்த மதத்தினருக்கும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது மியான்மரில் இருந்து வெளியேறிய ரோஹிங்யா முஸ்லிம்கள் இலங்கையில் தஞ்சம் அடைய புத்த மதத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இலங்கையின் கண்டி மாவட்டத்தில் திடீரெனப் பரவிய ஒரு தகவல் அங்கே பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. பௌத்த மதத்தினருக்கு ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும் உணவுப் பொருளை வழங்குவதாக இஸ்லாமிய வர்த்தகர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதை அடுத்து இரு மதத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். கண்டியில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவரின் கடை தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவங்களை தொடர்ந்து அங்கே கலவரம் மூண்டது.

கலவர நெருக்கடி காரணமாக, தெல்தெனியா பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. மேலும் பல இடங்களிலும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் நடந்து வந்தது, அதிபர் சிறீசேனா அரசுக்கு தலைவலியாக அமைந்தது. இதை அடுத்து, நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமல்படுத்துவது என அதிபர் சிறீசேனா தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, அவ்வாறே அறிவிக்கப்பட்டது. இதனால் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 20 வருடம் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும் என்ற சூழ்நிலை உருவானது.

இந்நிலையில் இலங்கையில் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாகவும், இதை அடுத்து அவசர நிலைப் பிரகடனத்தை ரத்து செய்வதாகவும், அதிபர் மைத்ரிபால சிறீசேன அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories