அவசர நிலைப் பிரகடனம் விலக்கிக் கொள்ளப் படுவதாக அதிபர் சிறீசேன அறிவிப்பு

sirisena - 2026

கொழும்பு: இலங்கையில் நடைமுறைப் படுத்தப் பட்டிருந்த அவசரநிலைப் பிரகடனம் விலக்கிக் கொள்ளப் படுவதாக இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேன அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த ஓர் ஆண்டாக பெரும்பான்மையினரான புத்த மதத்தினருக்கும், சிறுபான்மையினரான இஸ்லாமியருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இஸ்லாமியர்கள் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது அங்கே பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது. மேலும், புத்த மதம் தொடர்பான பழங்கால அடையாளங்கள், தொல்பொருள் இடங்களை இஸ்லாமியர்கள் சேதப்படுத்தி வருவதாக புத்த மதத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அண்மையில் மியான்மரில் புத்த மதத்தினருக்கும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது மியான்மரில் இருந்து வெளியேறிய ரோஹிங்யா முஸ்லிம்கள் இலங்கையில் தஞ்சம் அடைய புத்த மதத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இலங்கையின் கண்டி மாவட்டத்தில் திடீரெனப் பரவிய ஒரு தகவல் அங்கே பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. பௌத்த மதத்தினருக்கு ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும் உணவுப் பொருளை வழங்குவதாக இஸ்லாமிய வர்த்தகர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதை அடுத்து இரு மதத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். கண்டியில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவரின் கடை தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவங்களை தொடர்ந்து அங்கே கலவரம் மூண்டது.

கலவர நெருக்கடி காரணமாக, தெல்தெனியா பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. மேலும் பல இடங்களிலும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் நடந்து வந்தது, அதிபர் சிறீசேனா அரசுக்கு தலைவலியாக அமைந்தது. இதை அடுத்து, நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமல்படுத்துவது என அதிபர் சிறீசேனா தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, அவ்வாறே அறிவிக்கப்பட்டது. இதனால் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 20 வருடம் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும் என்ற சூழ்நிலை உருவானது.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

இந்நிலையில் இலங்கையில் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாகவும், இதை அடுத்து அவசர நிலைப் பிரகடனத்தை ரத்து செய்வதாகவும், அதிபர் மைத்ரிபால சிறீசேன அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories