அவசர நிலைப் பிரகடனம் விலக்கிக் கொள்ளப் படுவதாக அதிபர் சிறீசேன அறிவிப்பு

sirisena - 2026

கொழும்பு: இலங்கையில் நடைமுறைப் படுத்தப் பட்டிருந்த அவசரநிலைப் பிரகடனம் விலக்கிக் கொள்ளப் படுவதாக இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேன அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த ஓர் ஆண்டாக பெரும்பான்மையினரான புத்த மதத்தினருக்கும், சிறுபான்மையினரான இஸ்லாமியருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இஸ்லாமியர்கள் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது அங்கே பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது. மேலும், புத்த மதம் தொடர்பான பழங்கால அடையாளங்கள், தொல்பொருள் இடங்களை இஸ்லாமியர்கள் சேதப்படுத்தி வருவதாக புத்த மதத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அண்மையில் மியான்மரில் புத்த மதத்தினருக்கும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது மியான்மரில் இருந்து வெளியேறிய ரோஹிங்யா முஸ்லிம்கள் இலங்கையில் தஞ்சம் அடைய புத்த மதத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இலங்கையின் கண்டி மாவட்டத்தில் திடீரெனப் பரவிய ஒரு தகவல் அங்கே பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. பௌத்த மதத்தினருக்கு ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும் உணவுப் பொருளை வழங்குவதாக இஸ்லாமிய வர்த்தகர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதை அடுத்து இரு மதத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். கண்டியில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவரின் கடை தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவங்களை தொடர்ந்து அங்கே கலவரம் மூண்டது.

கலவர நெருக்கடி காரணமாக, தெல்தெனியா பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. மேலும் பல இடங்களிலும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் நடந்து வந்தது, அதிபர் சிறீசேனா அரசுக்கு தலைவலியாக அமைந்தது. இதை அடுத்து, நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமல்படுத்துவது என அதிபர் சிறீசேனா தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, அவ்வாறே அறிவிக்கப்பட்டது. இதனால் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 20 வருடம் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும் என்ற சூழ்நிலை உருவானது.

இந்நிலையில் இலங்கையில் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாகவும், இதை அடுத்து அவசர நிலைப் பிரகடனத்தை ரத்து செய்வதாகவும், அதிபர் மைத்ரிபால சிறீசேன அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories