இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்? ஓலா டாக்ஸி ஓட்டுநர்கள் கூட்டமைப்பு விளக்கம்!

Published:

ola cabs - 2026

சென்னை: ஓலா, உபேர் கால் டாக்சி நிறுவனங்களுக்காக கார் ஓட்டுபவர்கள் ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக வெளியான செய்திக்கு கால் டாக்சி ஓட்டுநர்கள் கூட்டமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்தக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன், சென்னை மற்றும் பெங்களூரில் நடைபெறும் வேலைநிறுத்தத்தில் கால் டாக்சி ஓட்டுநர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்றார். மேலும், வழக்கம்போல் கால் டாக்சிகள் இயக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, ஓலா, உபேர் நிறுவனங்களுக்கு சொந்தமான கார்கள், நிறுவனத்தில் பதிவு செய்த கார்கள் என இருவகையாகப் பிரித்து சவாரி வழங்குவதில் ஓலா, உபேர் நிறுவனங்கள் பாரபட்சம் காட்டுவதாக ஓட்டுனர்கள் புகார் கூறினர். எனவே ஓலா, உபேர் நிறுவனங்கள் சொந்தமாக கார் வைத்து சவாரி கொடுக்க கூடாது என்று வலியுறுத்தி ஞாயிறு நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஓட்டுனர்கள் முடிவு செய்ததாக செய்தி வெளியானது.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img