December 6, 2025, 9:41 PM
25.6 C
Chennai

தி இந்து பிபிசி செய்தியாளர்- குழு இந்தியா வர 5 ஆண்டுகள் தடை : மத்திய அமைச்சகம் வலியுறுத்தல்

 தி இந்து நிருபர் ஷிவ் சஹாய் சிங்
தெற்காசியாவுக்கான பிபிசி செய்தியாளர் ஜஸ்டின் ரெளலட் மற்றும் அவரின் குழுவினர் இந்தியாவுக்குள் நுழைய குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வனத்துறை துணை காவல் தலைவர் வைபவ் சி. மாத்தூர் இது தொடர்பான அலுவல் ஆணையை பிப்ரவரி 27 அன்று வெளியிட்டுள்ளார். இதில் 5 ஆண்டு காலத்துக்கு நாட்டின் பிற பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பிபிசி படமெடுக்கவும் தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பிபிசி செய்தியாளர் ஜஸ்டின் ரெளலட்டின் ஆவணப்படமான ''ஒன் வோர்ல்ட்: கில்லிங் ஃபார் கன்சர்வேஷன்'' உருவாக்கத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அஸாமின் காசிரங்கா புலிகள் சரணாலயத்தில் விலங்குகளை வேட்டையாடும் மனிதர்களுக்கு எதிராகத் தொடங்கப்பட்டுள்ள செயல்பாடுகளை ஆய்வு செய்யும் விதமாக அந்த ஆவணப்படம் அமைந்திருந்தது.
அப்படத்தில், காண்டாமிருகத்தை வேட்டையாடுபவர்களைச் சுடவும், அவர்களின் உயிரைப் போக்கவும் காவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள குறிப்பில், ரெளலட் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகும் ஆவணப்படம் எடுத்துள்ளார். இதன்மூலம் அவர் சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியிருந்த விதிமுறைகளை மீறிவிட்டார்.
ரெளலட் மற்றும் அவரின் குழுவினர், உண்மைக்குப் புறம்பான தகவல்களை அளித்து இந்திய அரசாங்க அதிகாரிகளைத் தவறாக வழிநடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் இந்தியாவின் விலங்கு பாதுகாப்பு முயற்சிகள் முறையாகக் காட்டப்படவில்லை. இந்த ஆவணப்படம் முற்றிலும் தவறான முறையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.
பிபிசி தரப்பில் இதுகுறித்து எந்த பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Ministry seeks ban on BBC correspondent, crew's entry into India for five years, revocation of visas
Documentary explores the anti-poaching strategy adopted by guards of the Kaziranga Tiger Reserve in Assam.
The Ministry of Environment and Forests (MoEF) has urged the Ministry of External Affairs to revoke the visas of BBC's South Asia correspondent Justin Rowlatt and his crew, and prevent “their further entry into India for a period not less than five years.”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories