ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் பொது மக்கள் மிகவும் பீதிக்கு உள்ளானார்கள். இதனால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெளிப்பகுதிகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் சில நொடிகள் நீடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக உடனடி விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வடக்கு பகுதியை சேர்ந்த குப்வாரா, கிஸ்த்வார், பதர்வா உட்பட பல்வேறு பகுதிகளில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


