சிட்னி: ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட், இன்று இந்தோனேஷிய நாட்டுக்கான தனது நாட்டு தூதுவரை திரும்ப அழைத்துக் கொள்வதாக அறிவித்தார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இருவரை, எவ்வளவோ வேண்டுகோள்களுக்கு மத்தியிலும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தூக்கிலிட்ட இந்தோனேஷியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை ஆஸ்திரேலியா மேற்கொண்டது. இது குறித்து கான்பெர்ராவில் டோனி அப்போட் தெரிவித்தபோது, “நாங்கள் இந்தோனேஷியாவின் இறையாண்மையை மதிக்கிறோம். இந்தோனேஷியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நல்லுறவு திகழ விரும்புகிறோம். ஆனால், இந்த விவகாரத்தால், கடந்த சில நாட்களாக உறவு பாதிக்கப்பட்டது. எனவே இந்த நடவடிக்கை வழக்கமான ஒன்றுதான்.” என்று கூறியுள்ளார். முன்னதாக, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மயூரன் சுகுமாரன், அண்ட்ரூ சான் இருவருக்கும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தோனேஷியாவுக்கான தனது தூதரை திரும்பப் பெற்றது ஆஸ்திரேலியா: இருவர் தூக்கிலிடப் பட்டதற்கு எதிர்வினை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari