புதுதில்லி: நேபாளத்தில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இன்சுலின் தேவைப்படும் நோயாளிகளுக்கு உடனடியாக வழங்குவதற்காக, ரூ.1 கோடி மதிப்பிலான இன்சுலின் உடனே அனுப்பப் பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ரூ.1 கோடி மதிப்புள்ள 75 ஆயிரம் இன்சுலின் யூனிட்கள் நேபாளத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

