நேபாளத்துக்கு ஐ.நா. சபை சார்பில் 15 மில்லியன் டாலர் அளவில் நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன. மருந்துப் பொருள்கள், மின்சாரம், தண்ணீர், உணவு என அதிகம் தேவைப்படும் நேபாளத்துக்கு அவசர காலப் பொருள்கள் அனுப்பி வைக்கப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. து.தலைமைச் செயலர் வாலெரி அமோஸ் டிவீட்டர் செய்தியில் ஐ.நா.வின் அவசரகால நிதியிலிருந்து நேபாளத்துக்கு 15 மில்லியன் டாலர் உதவி உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

