கருணாநிதி மறைவுச் செய்தி கேட்டு முல்லைத்தீவில் ஆரவாரம்!

Published:

mullaithivu crackers - 2026
தமிழக முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான கருணாநிதி செவ்வாய்க் கிழமை மாலை இயக்கை எய்தினார். அவரது மறைவுச் செய்தி வெளியானதும் முல்லைத்தீவு நகரில் வெடி கொளுத்திப் போட்டு, மக்கள் ஆரவாரம் செய்துள்ளார்கள்.
செவ்வாய்க்கிழமை மாலை 7.00 மணி அளவில் முல்லைத்தீவு நகர் பகுதியில் மக்கள் வர்த்தகர்கள் சிலர் இணைந்து வெடி கொளுத்தி தங்கள் ஆரவாரத்தை வெளிப் படுத்தியுள்ளார்கள்.
இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பிற்குக் கருணாநிதியும் காரணமாக இருந்தார் என்றும், அவர் நினைத்திருந்தால் ஈழத் தமிழ் மக்களின் உயிர்களை காப்பாற்றி இருக்க முடியம் என்றும் தமிழர்களின் இன அழிப்பிற்கு காரணமாக அமைந்த ஒரு காரணத்திற்காக அவரின் இறப்பிற்கு மகிழ்ச்சி வெளிப்படுத்தி வெடி கொளுத்தி கொண்டாடியுள்ளதாக வீதியில் நின்ற மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இருந்த போதிலும் கருணாநிதி தமிழ் மொழிக்கு ஆற்றிய பணி போற்றத் தக்கது எனவும் வெடி கொளுத்திய மக்கள் தெரிவித்தனர்.
ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img