கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார் கோத்தய ராஜபட்ச !

Published:

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் சகோதரர் கோத்தபய ராஜபட்ச மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கில் இன்று அவர் ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி அவர் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார். முன்னதாக,மகிந்தவின் இன்னொரு சகோதரர் பசில் ராஜபட்ச மீது சுமத்தப் பட்டிருந்த ஊழல்குற்றச்சாட்டு குறித்த விசாரணையில், அவர் பின்னர் கைதானார். அது போல கோத்தபயவும் விசாரணைக்குப் பின் கைதாவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார். அவர் மீது விசாரணை மேலும் நடைபெறும் என்று தெரிகிறது. மகிந்த ராஜபட்ச ஆட்சியில் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்தார் கோத்தபட ராஜபட்ச. அப்போது அவன்கார்ட், லக்னலங்கா நிறுவனங்களில் நடந்ததாகக் கூறப்பட்ட ஊழல் மற்றும் நிதி மோசடி தொடர்பாகத்தான் தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related articles

Recent articles

spot_img