மீண்டும் இலங்கையில் கல்முணை என்கிற இடத்தில் குண்டு வெடிப்பு; 15 பேர் உயிரிழப்பு! இதில் 4 முதல் 6 பேர் மனித வெடிகுண்டாக இருந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை போலீஸ் தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்டுள்ள உடல்களில் 6 ஆண்களுடையது எனவும் 3 பெண்களுடையது எனவும் 6 சிறுவர்களுடையது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்துள்ள பெண் ஒருவரும் சிறுவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் பாதுகாப்புப் படையினருக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப் படுகிறது.
மீட்கப்பட்ட உடல்கள் கல்முனை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக போலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
One or two sucide bomers escaped from from the incident place with injuries – Eastern Army Commander Aruna Jayaskear said #lka #SriLanka #EasterSundayAttacksLK
#SriLanka: 15 bodies (6 men, 6 children & 3 women) recovered from the house where an explosion took place, amidst heavy shooting between Armed forces & suspected gunmen, in #Sainthamaruthu. Injured woman & child hospitalised:Police
#Lka #Kalmunai #SriLankaAttacks #EasterAttacksLK




