February 22, 2026, 7:41 AM
25.4 C
Chennai

முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிராக… இலங்கை கண்டியில் வெடித்தது போராட்டம்!

kandy protest - 2026சர்ச்சைக்குரிய முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிராக இலங்கை, கண்டி நகரில் திங்கட்கிழமை இன்று காலை போராட்டம் நடத்தப் பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி இலங்கையில் நடைபெற்ற இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை இலங்கையில் வலுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் அது இன்னும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் அசாத் சாலி, ஹிஸ்புல்லா, ரிஷாட் பதியுதீன் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இலங்கை கண்டி நகரில் அதுரலிய ரத்ன தேரர் இன்று நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவருக்கு ஆதரவாகவும், அவரது போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையிலும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் இன்று மூன்றாவது நாளாக சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் இன்று காலை பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் கண்டிக்கு சென்றுள்ளதுடன், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதுரலிய ரத்ன தேரரை சந்தித்தனர். இதை அடுத்து, தற்போது அதுரலிய ரத்ன தேரரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

kandy protest2 - 2026கண்டியிலுள்ள வர்த்தக நிறுவனங்கள் பலவும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், கண்டியில் வன்முறை நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் எனவே கண்டியில் பாதுகாப்பு பலப் படுத்தப் பட வேண்டும் என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அதிபர் மைத்ரீபால சிறீசேனவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதனிடையே, கண்டி தலதா மாளிகைக்கு முன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வரும் அதுரலிய ரத்ன தேரருக்கு ஆதரவாக இன்று காலை 9 மணி முதல் வவுனியா கண்டி பிரதான வீதியிலுள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு முன் சிலர் ஆர்ப்பாட்டம் தொடங்கியுள்ளனர். இது போல் பல்வேறு இடன்களிலும் போராட்டங்கள் தலைதூக்கியுள்ளதால், இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் ரிஷாட் பதியூதீன், ஆளுநர் அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியபடி இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பட்டு வருகின்றன. கண்டி நகர் மற்றும் அதனை  அடுத்துள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கே மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories