முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிராக… இலங்கை கண்டியில் வெடித்தது போராட்டம்!

kandy protest - 2026சர்ச்சைக்குரிய முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிராக இலங்கை, கண்டி நகரில் திங்கட்கிழமை இன்று காலை போராட்டம் நடத்தப் பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி இலங்கையில் நடைபெற்ற இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை இலங்கையில் வலுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் அது இன்னும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் அசாத் சாலி, ஹிஸ்புல்லா, ரிஷாட் பதியுதீன் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இலங்கை கண்டி நகரில் அதுரலிய ரத்ன தேரர் இன்று நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவருக்கு ஆதரவாகவும், அவரது போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையிலும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் இன்று மூன்றாவது நாளாக சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் இன்று காலை பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் கண்டிக்கு சென்றுள்ளதுடன், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதுரலிய ரத்ன தேரரை சந்தித்தனர். இதை அடுத்து, தற்போது அதுரலிய ரத்ன தேரரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

kandy protest2 - 2026கண்டியிலுள்ள வர்த்தக நிறுவனங்கள் பலவும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், கண்டியில் வன்முறை நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் எனவே கண்டியில் பாதுகாப்பு பலப் படுத்தப் பட வேண்டும் என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அதிபர் மைத்ரீபால சிறீசேனவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதனிடையே, கண்டி தலதா மாளிகைக்கு முன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வரும் அதுரலிய ரத்ன தேரருக்கு ஆதரவாக இன்று காலை 9 மணி முதல் வவுனியா கண்டி பிரதான வீதியிலுள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு முன் சிலர் ஆர்ப்பாட்டம் தொடங்கியுள்ளனர். இது போல் பல்வேறு இடன்களிலும் போராட்டங்கள் தலைதூக்கியுள்ளதால், இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் ரிஷாட் பதியூதீன், ஆளுநர் அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியபடி இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பட்டு வருகின்றன. கண்டி நகர் மற்றும் அதனை  அடுத்துள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கே மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories