குரு பெயர்ச்சி பலன்கள் (2025-26): துலாம்

Published:

gurupeyarchi image common - 2026

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – 2026

இந்த ஆண்டில் குருபெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025  நடந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி 11/5 2025 ஞாயிறு ஆலங்குடி கோயில் தென்குடி திட்டை கோயில் முறைப்படி மதியம் 1.19 மணிக்கு பெயர்ச்சி ஆகின்றார் இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குச் செல்கிறார். மிதுனம், குருபகவானின் நட்புகிரஹமான புதனின் வீடு. மேலும் ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவானின், ஐந்தாம் பார்வை துலாம் ராசியிலும் ஏழாம்பார்வை தனுசு ராசியிலும் ஒன்பதாம் பார்வை கும்பம் ராசியிலும் பதிகிறது. இந்த அடிப்படையிலும், சனி, ராகு-கேது பெயர்ச்சிகளினால் ஏற்பட்டுள்ள கிரஹசார மாற்றங்களின் அடிப்படையிலும் பன்னிரு ராசிகளுக்குமான குருபெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளது


குரு பெயர்ச்சி பலன்கள் – 2025

துலாம்

இதுவரை அட்டம குருவாக இருந்த குரு பகவான் இனிவரும் 11-05-2025 முதல் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து உங்களின் ராசியையும், மூன்றாமிடம், பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்வை இடுகிறார். இதுநாள் வரை பல தடைகளை சந்தித்து வந்த உங்களுக்கு நல்ல காலமாக அமையும்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

உங்களின் ராசியை குரு பார்ப்பதால் உடல் நலனில் வளம் பெறுவீர்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சியை பெறுவீர்கள். சொந்த தொழில் செய்து வருபவருக்கும். மருத்துவ துறையில் இருப்பவருக்கு இந்த காலம் நல்லதாக அமையும். தங்கம், வெள்ளி வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். சொந்த ஊரிலிருந்து வெளியில் சென்று பிரபலம் அடைவீர்கள். மன சஞ்சலங்கள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.

மூன்றாமிடமான முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்க பெறுவீர்கள். எடுத்த செயலில் ஊக்கமும், ஆக்கமும் உண்டாகி பெரருளாதாரத்தில் மேன்மை பெறுவீர்கள். கடந்த காலத்தில் நீங்கள் பட்டதுன்பம் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். ஆன்மீக சேவையும், ஆர்வமும் உங்களுக்கு பக்க பலமாக செயல்பட்டு மேன்மை பெறுவீர்கள்.

பஞ்சமஸ்தானத்தில் ஏற்கனவே சனி / ராகு இணைந்திருப்பது அவர்களை குரு பார்வை வருவது குலதெய்வ அனுகிரகமும் கொடுத்த இடத்தில் பணம் வந்து சேரும். நீங்கள் கொடுத்த உத்திரவாதத்தை செயல்படுத்துவீர்கள். பூர்வீக இடத்தில் உங்கள் பெயருக்கு நிறைவான சூழ்நிலை உண்டாகும்.

08-10-2025 முதல் குரு உங்களின் தொழில் ஸ்தானத்தில் வருவதால் புதிய தொழில் முயற்சிகளை கைவிட்டு செய்யும்  தொழிலில் கவனம் செலுத்துவது நல்லது. கூட்டு தொழிலை தவிர்ப்பது நல்லது.

ALSO READ:  ஆவணி அவிட்டம்; விஸ்வகர்ம சமுதாயத்தினர் பூணூல் மாற்றி வழிபாடு!

குரு பகவானின் பார்வை பலன்கள்: 

ராசியை குரு பார்ப்பதால், சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். ஆரோக்கியம் மிகச் சிறப்பாக அமையும். தோற்றப் பொலிவு கூடும். தயக்கம் தடுமாற்றம் எல்லாம் நீங்கும். கையில் பணம் புரளும். வருங்காலத்தை மனதில் கொண்டு சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். 3-ம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால், சொத்துச் சேர்க்கை உண்டு. எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. பலருக்கும் நகை, ஆபரணங்கள் சேரும். செய்தொழிலில் இருந்து வந்த கடின நிலைகள் மாறும். 5-ம் இடத்தை குரு பார்வையிடுவதால், வெகு காலமாக பிள்ளைப் பாக்கியத்துக்காகக் காத்திருந்த அன்பர்களுக்கு, பிள்ளைப் பேறு கிடைக்கும். பிள்ளைகளால் ஆதாயம், பெருமை வந்து சேரும். வட்டிக்கு வாங்கிய கடனை கொஞ்சம் கொஞ்சமாக தந்து முடிப்பீர்கள். எடுத்த காரியங்களில் முதல் முயற்சியிலேயே வெற்றி கிட்டும். வாகன வசதி பெருகும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்  

பரிகாரங்கள்:

வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு மூன்று நெய் தீபமேற்றி குரு காயத்ரி சொல்லி கடலை பருப்பு நைவேத்தியம் செய்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியைத் தரும்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img