December 5, 2025, 1:08 PM
26.9 C
Chennai

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020-கன்னி

raghukethu-peyarchi
raghukethu-peyarchi

ராகு கேது பெயர்ச்சி  23.09.2020 5.56.10மணி முதல்  12.04.2022 இரவு 8.57.41 வரை..

ராகு மிதுன ராசியில் இருந்து ரிஷபத்துக்கும், கேது தனுசு ராசியில் இருந்து விருச்சிகத்துக்கும் மாறுகிறார். (இது லஹரி பஞ்சாங்கப்படி நடக்கிறது)

அடியேன் ஜகந்நாத் ஹோரா கணித முறைப்படி லஹரி பஞ்சாங்கப்படி பலனை எழுதி இருக்கிறேன். ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள் அடுத்த 18 மாதங்களில் ராகு/கேது சஞ்சரிக்கும் 9 நக்ஷத்திர அதிபதிகளின் பலம், மற்ற கிரஹங்களின் சஞ்சாரம் இவற்றை ஒட்டி கணிக்கப்பட்டது.

லக்னம் 05.14(செவ்வாய்) 02.40ராகு 29.59.99 
   கிரஹ நிலைகள் 23.09.2020 – 5.56.10 மணிக்கு  சுக்ரன் 25.05
(சனி) 01.14 
குரு 23.27சந்திரன் 29.44 கேது 29.59.99புதன் 01.20சூரியன் 06.48

கன்னி :
(உத்திரம் 2,3,4, ஹஸ்தம், சித்திரை 1,2 பாதங்கள் முடிய):  
45/100

3ல் வரும் கேது பலத்த நன்மை தரும், 9ல் ராகு கொஞ்சம் சிரமத்தை தரும். பொதுவில் இந்த பெயர்ச்சி குரு, சனியின் சஞ்சாரங்களும், அவ்வளவு நன்மை செய்யவில்லை என்றாலும், கேது ராசிநாதன் புதன், சூரியன், செவ்வாய், சந்திரன், சுக்ரன் என அதிசீக்கிர கிரஹங்களால் அவ்வப்போது நல்லது நடந்து கொண்டிருக்கும். பெயர் புகழ் பரவும், நோய் நீங்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பொருள் வரவு தாராளம் அதே நேரம் செலவுகளும் அதிகரிக்கும். வரவு செலவு சரியாக இருக்கும். கேது முதல் 8 மாதம் புதனின் நக்ஷத்திரத்தில் சஞ்சரிப்பதால் அதிக நன்மை உண்டாகும் இதை பயன்படுத்தி கொள்ளுங்கள். எதையும் யோசித்து செய்வது, அவசரப்படாதிருத்தல் போன்றவை இந்த பெயர்ச்சியில் கெடுதல்கள் வருவதை குறைக்கும்.

குடும்பம் பொருளாதாரம் : 2க்குடைய சுக்ரன்  ராசியில் ராகு இருப்பதாலும் கேது அதை பார்ப்பதாலும் தன வருவாய் அதிகரிக்கும். எதிர்பாரா இனங்களில் வருமானம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி, திருமண வைபவங்கள், கேளிக்கைகள் என்று இருக்கும். 7க்குடைய குரு 6ல் மறைவது பொருளாதாரத்தை முடக்கும். சிக்கணம் மிக முக்கியம் பார்த்து செலவு செய்வது, உறவினர், நண்பர்கள் மட்டும் அல்லாது, குடும்பத்தில் உள்ளவர்களாலும் எதிர்பாரா செலவும் அதனால் மனஸ்தாபங்களும் வரும். செலவுகள் அதிகரிக்கும்.

உடல் ஆரோக்கியம் : வயறு, குடல், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் வைத்திய செலவு உண்டாகும். 7க்குடைய குரு 6ல் மறைந்து வாழ்க்கை துணைவரின் வைத்திய செலவை அதிகரிக்கும். குழந்தைகளாலும் பெற்றோராலும் மருத்துவ செலவு உண்டாகும். பணம் அதிகம் விரயம் ஆகும் அதனால் மன சஞ்சலம் உண்டாகும். தியானப்பயிற்சி, சரியான ஆகார கட்டுப்பாடு, இறை நினைவு போன்றவை ஓரளவு வியாதிகளை கட்டுப்படுத்தும்.

உத்தியோகஸ்தர்கள் (அனைத்து பிரிவினரும்) : வேலை பளு அதிகரிக்கும். கேது புதனின் நக்ஷத்திர கால்களில் சஞ்சரிக்கும் 23.09.2020 – 02.06.2021 வரையில் ஓரளவு நன்றாகவே இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு வேலை மாற்றம் பணப்புழக்கம் தாராளமாகுதல் என்று நன்றாக இருக்கும். அதன்பின் 09.02.2022 வரை மன அழுத்தம், வழக்குகள், தேவையற்ற பிரச்சனைகள், வீண் விவாதங்களால் அவஸ்தை நெருங்கிய நண்பர்கள் அல்லது மேலதிகாரிகளால் தொல்லை என்று இருக்கும். இந்த காலங்களில் பொறுமையும் யோசித்து செயல்படுவதும், நம்பிக்கையானவர்களிடம் தக்க ஆலோசனை பெறுவதும் நன்மை தரும். பொதுவில் ரொம்பகவனமாக இருக்கவேண்டிய பெயர்ச்சி, பணம் வருவாய் இருந்தாலும் செலவும் கட்டுக்கடங்கமல் இருக்கும்.

சொந்த தொழில் (வியாபாரம், விவசாயம், கலை, அரசியல் அனைத்து தொழிலும்) : இந்த பெயர்ச்சி நன்மை தரவில்லை கவனம் தேவை பொதுவாக 3ல் கேது நன்மை தரும் என சொல்லப்பட்டாலும் சனி சம்பந்தம் பெறுவதால் பெரிய நன்மைகள் கிடைக்காது. போட்டிகள் அதிகம் இருக்கும். எவருடனும் விவாதம் செய்வது கூடாது. அரசாங்கத்துடன் பகை கூடாது. கணக்கு வழக்குகளை சரிவர வைத்து கொள்ள வேண்டும். புதிய முயற்சிகளை நல்ல நேரம் ஜனன ஜாதக நிலையை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி அதன்படி செயல்பட்டு ஆரம்பிக்க வேண்டும். முதல் 8மாதம் ஜூன் 2021 வரை பெரிய பாதிப்பு இருக்காது. சுதாரித்து கொண்டால் அடுத்துவரும் காலங்களை பெரிய பிரச்சனை இல்லாமல் கடந்துவிடலாம். கேதுவின் சனி, குரு நக்ஷத்திர கால்களில் சஞ்சரிக்கும் காலம் வெகு சுமார்.

மாணவர்கள் : படிப்பில் அதிக அக்கறை கொள்ள வேண்டிய காலம் ராசிநாதன் புதன் நன்றாக இருந்தாலும் முதல் 8மாதம் ஜூன் 2021 வரை புதன் நக்ஷத்திரத்தில் சஞ்சரிக்கும் கேது நன்மை தரும் படிப்பில் வெற்றியும் நல்ல மதிப்பெண், விரும்பிய பாடம் கல்லூரி என்று கிடைக்கும் அதன் பின் 12.04.2022 வரை கொஞ்சம் சிரமம் நிதானித்து செயல்பட வேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள் அறிவுரைப்படி நடப்பது நன்மை தரும். இறைத்யானம் நன்மை தரும்.

சர்வே ஜனா சுகினோ பவந்து:

lakshmi narasimhachari

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் – கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: mannargudirs1960@gmail.com
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories