December 5, 2025, 11:56 AM
26.3 C
Chennai

துலாம் (பிலவ – மாசி மாத பலன்கள்)

masi month rasi palankal - 2025
karthigai month palangal

ப்லவ வருடம் மாசி மாத ராசி பலன்கள்
(12.2.2022 முதல் 13.03.2022 வரை)

ப்லவ வருடம் மாசி மாத ராசி பலன்கள் (12.02.2022 முதல் 13.03.2022 வரை) புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி  மாசி மாதம் ஒரு நாள் முன்னதாக துவங்குகிறது

வருகிற 12.02.2022 நள்ளிரவு 12:23:6 மணிக்கு சூரியபகவான் மகர ராசியில் இருந்து  கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அவர் கும்ப ராசியில் 13.03.2022 இரவு 08:49:01 மணி வரை சஞ்சரிக்கிறார்.

இது புஷ்யபக்ஷ அயனாம்ஸத்தை ஒட்டி ஜகந்நாத் ஹோரா கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்டது. 

வாக்கியப்படி 13.0.2022 அதிகாலை 04.13 மணிக்கு (உதயாதி 55.37 நாழிகைக்கு) கும்ப ராசிக்கு பெயர்ச்சிஆகிறார்.

ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள் புஷ்ய பக்ஷ அயனாம்ஸ பஞ்சாங்கப்படி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

உங்கள் பிறந்த லக்னம் தெரிந்தால் அந்த ராசிக்கான பலனையும் சேர்த்து பார்த்தல் சரியாக வரும்.

masi month chart - 2025

கோச்சார கிரஹ நிலைகள்

கிரஹ பாத சாரங்கள் : மாசி மாத பிறப்பின் போது

லக்னம் – விருச்சிகம் – விசாகம் – 4
சூரியன் –  கும்பம் – அவிட்டம் – 3
சந்திரன் – மிதுனம் – மிருகசீரிடம் – 4
செவ்வாய் – தனூர் – பூராடம் – 3
புதன் –  மகரம் – உத்திராடம் – 3
வியாழன் – கும்பம் –  சதயம் – 4
சுக்ரன் –  தனூர் –  பூராடம் – 3 
சனி – மகரம் – அவிட்டம் – 1
ராகு – ரிஷபம் – கிருத்திகை – 3
கேது – விருச்சிகம் – அனுஷம் – 1

கிரஹ வலிமைகள் :

மிக வலுவான கிரஹம் சுக்ரன்,  வலுவான கிரகம் :  குரு, சனி

சூரியன், புதன், ராகு,கேது, செவ்வாய் இவை மத்ய பலனை கொடுக்கும்

இவை மாதம் பிறக்கும் போது உள்ள நிலை. ஒவ்வொரு கிரஹமும் அந்த மாத்தத்தில் சஞ்சார நிலை கொண்டு வலிமை மாறுபடும்

இவற்றை கணக்கில் கொண்டு பலன் சொல்லப்படுகிறது. மேலும் ஜாதகர் பிறப்பு லக்னத்தை ஒட்டி பலன் சொல்லப்படுகிறது உதாரணமாக மேஷ ராசி ஜாதகர் கடக லக்னத்தில் பிறந்தால் கடகராசி பலனும் அவருக்கு பொருந்தும். உங்களது பிறந்த லக்னம் தெரிந்தால் அந்த ராசிக்கான பலனையும் சேர்த்து பார்த்து அறியவும்.

பொது பலன்:

பாரத தேசம் & தமிழகம் பொருத்தவரை:  
சுக்ரன் வலு அதனால் கலைத்துறை, வங்கி பணம் புழங்கும் இடம், ஆடை ஆபரண உற்பத்தி & விற்பனை, போன்றவை நல்ல முன்னேற்றம் பெறும். அன்னியர்களிடம் தேசத்தின் மதிப்பு கூடும். அரசர்களுக்குள் உண்டாகும் சண்டை மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும். பொதுவாக விவசாயம், கல்வி துறைகள் சிரமத்துக்குள்ளாகும். விரோதிகளின் கை ஓங்கியது போல தெரியும், செவ்வாய் மகரத்தில் சஞ்சரிக்கும் 26.02.2022 முதல் ஓரளவு நன்மை உண்டாகும். தமிழகத்தில் குழப்பங்கள் நீங்கி ஓரளவு நன்மை உண்டாகும். மத்தியில் ஆளும் ஆட்சி தங்களது நோக்கங்களை நிறைவேற்றும் போது உலக அரங்கில் வரவேற்பை பெற்றாலும் பொருளாதார தேக்கத்தினால் மக்கள் விரக்தி அடைவர் நாட்டில் சலசலப்பு இருந்து கொண்டிருக்கும். பொதுவில் பெரிய ஆபத்துகள் இல்லை எனினும் மக்களிடம் பயம் கலந்த ஒரு நிலை இருந்து கொண்டிருக்கும்.

மாத ராசிபலன் கணிப்பு :
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி, ஜோதிடர்,
ஸ்ரீஅக்ஷயா வேதிக் அஸ்ட்ரோ ரிசர்ச் பௌண்டேஷன்
D1-304, Block D1, Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Land Line : 044-35584922 | 8056207965 (வாட்ஸப்)
Email ID : mannargudirs1960@hotmail.com


துலாம்🙁 சித்திரை 3,4 பாதங்கள், ஸ்வாதி 4 பாதம், விசாகம் 1,2,3 பாதங்கள் முடிய):

உங்கள் ராசிநாதர் சுக்ரன் செவ்வாயுடன் மாதம் முழுவதும் 3,4 இடங்களில் சஞ்சரிப்பது, சுக ஸ்தானத்தில் சனி ஆட்சி, புதனுடன் தைரியம், நிம்மதி இவை உண்டாகுதல் தொழிலில் சமாளிக்கும் அளவுக்கு வருமானம், 5ல் சூரியன் குரு சேர்க்கை குழந்தை பாக்கியம், பிள்ளைகளால் பெருமை, வருமானம் பெருகுதல் நாள்பட்ட வரவுகள் இப்பொழுது கிடைத்தல் மேலும் குருபகவான் ராசியை பார்ப்பது மனதில் உற்சாகத்தை தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஜீவன வகையில் நல்ல ஏற்றத்தை தரும். பொருளாதாரம் மிக நன்றாக இருக்கும்.. புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும் சொந்த தொழில் விரிவாக்கம் அல்லது புதிதாக தொடங்கும் எண்ணம் இந்த மாதம் ஈடேற அதிக வாய்ப்பு, அனைவருக்கும் ஜீவன வகையில் அதிக நன்மை உண்டாகும் கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். லாபாதிபதி சூரியன் 5ல் குருவுடன் இருப்பது தாமதமாகி கொண்டிருந்த குழந்தை பாக்கியம் கிடைத்தல் கல்வியில் முன்னேற்றம், உத்தியோகத்தில் அதிகாரம் அந்தஸ்து புகழ் கிடைத்தல் கடந்த காலங்களில் போட்ட விதை இன்று மரமாகி பலன் தர ஆரம்பிக்கும். அதே நேரம் ராசியின் பலனை கேதுவும் 7ம் இட பலனை ராகுவும் தருவது சிறு பாதிப்புகள், வாழ்க்கை துணைவர் வகையில் செலவுகள், குடும்பத்தில் சிறு சஞ்சலம் என இருக்கும். வார்த்தைகளை விடும்போது கவனம் தேவை. பொதுவில் நன்மை அதிகம் என இருந்தாலும், கொஞ்சம் கவனமுடன் செயல்படுவது கெடுதலை குறைக்கும். முயற்சிகளை விடாமல் சோர்ந்து விடாமல் செய்வது வரும் காலங்களுக்கான விதையாகும்.

சித்திரை 3,4 பாதங்கள்: சந்திராஷ்டமம் : 08.03.2022 இரவு 03.39 மணி முதல், 09.03.2022 காலை 06.14 மணி வரை

ஸ்வாதி 4 பாதங்கள் : சந்திராஷ்டமம் : 09.03.2022 காலை 06.14 மணி முதல் 10.03.2022 காலை 09.17 மணி வரை

விசாகம் 1,2,3 பாதங்கள் : சந்திராஷ்டமம் : 10.03.2022 காலை 09.17 மணி முதல், 11.03.2022 பிற்பகல் 12.17 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : நரசிம்மர் வழிபாடு, அல்லது துர்கை வழிபாடு நலிவடைந்த கோயில்களில் உழவாரப்பணி, ஒருகால பூஜைக்கு உதவுதல். முடிந்த அளவு தானம் செய்யுங்கள் பெரியோர்களுக்கு மரியாதை கொடுத்து அவர்கள் சொல்படி நடப்பதும் நன்மை உண்டாக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories