கருத்தே சொல்லாமல் களம் காணத்துடிக்கும் ரஜினி

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் தேர்தல் வர இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகும். அது வரை ரஜினி ரசிகர்கள் பொறுத்திருக்க வேண்டுமா? காலம் என்னென்ன மாறுதல்களைச் செய்யக் காத்திருக்கிறதோ? யாருக்குத் தெரியும்.

உள்ளாட்சித் தேர்தல்களிலேயே ரஜினி தன் பலத்தைப் பரிசோதிக்கலாமே? விஜயகாந்த் ரசிகர் மன்றம் அப்படித்தானே ஆரம்பகால களம் கண்டது?

நாடாளுமன்றத் தேர்தல் முதலில் வந்தால் ரஜினியின் நிலைப்பாடு என்ன? நடப்பு அரசு கவிழ்ந்து தேர்தல் முன்பே வரும் என்று ரஜினி யூகிக்கிறாரா? 

அல்லது பாரதிய ஜனதா அப்படி அவருக்கு கோடிட்டுக் காட்டி இருக்கிறதா? 

மோடி மறுமுறை பிரதமராவது பற்றி ரஜினியின் நிலைப்பாடு என்ன? 

அகில இந்தியக் கேள்விகளுக்குக் கருத்துத் தெரிவிக்காமல் மாநில அரசியலை மட்டுமே குறை கூறுவது ரஜினிக்கு எதிர்மறை விளைவுகளையே தோற்றுவிக்கும்.

அரசியலில் புதிய சக்திகள் வரவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ரஜினி மராட்டியர் என்று எதிர்க்கப்படுவதிலும் எனக்கு சம்மதமில்லை. 

இன்றைய நிலையில் தேசிய அரசியலின் போக்கு  எல்லா மாநிலங்களையும் ஒரு சேரப் பாதிக்கிறது. 

பண நோட்டு மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. நீட், மருத்துவர் தகுதி காண் தேர்வு, வங்கி சீரமைப்பு, முத்தலாக் விவகாரம் என்று தேசிய அரசியலின் பல்வேறு முகங்கள் குறித்து ரஜினி எந்தக் கருத்தும் கூறாமல்- 

சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள தான் அரசியலுக்கு வந்தால் மக்கள் கண்ணை மூடி ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைப்பது சரி அல்ல. அது அவருக்குத் தோல்வி தரும். மாற்று அரசியலை விரும்புபவர்களும் பின்னடைவையே சந்திப்பார்கள்.

எச்சரிக்கை

கருத்து: பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories