
எந்த தகுதியின் அடிப்படையில் ஈவேராவிற்கு சிலை வைக்கப் பட்டுள்ளது என்பதை திமுகவும் ஸ்டாலினும் விளக்க வேண்டும்
நடராஜரை இழிவுபடுத்தி அதன் மூலம் இந்துக்கள் மனதை புண்படுத்தி கலவரத்தை தூண்ட முயற்சி செய்த U2Brutus கயவர்களை கைது செய்ய வக்கில்லாத தமிழக அரசும் காவல்துறையும் கனல் கண்ணன் அவர்களை கைது செய்திருப்பது அவமானத்துக்குரியது; ஒருதலை பட்சமானது
ஈவேரா என்பவர் ஒரு அமைப்பினுடைய தலைவராக இருந்தவர். அவ்வளவுதான், அவர் எந்த அரசு பதவியிலோ அதாவது முதல்வராகவோ கவர்னராகவோ இருந்தவர் கிடையாது.
இந்திய சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக அனுசரியுங்கள் என்று சொன்ன ஒருவருக்கு இந்திய தேசத்தில் சிலை வைப்பது பைத்தியக்காரத்தனம்.
தனக்கு சொல்லிக்கொள்ள ஒரு தலைவர் இல்லை என்பதால்,
கருணாநிதி அவர்களால் இட்டுகட்டப்பட்டு ‘பெரியார்’ ஆக்கப்பட்டவர் தான் இந்த ஈவேரா !
ஒன்று சர்ச் , மசூதி வாசலில் ஈவேரா சிலையை வையுங்கள் ! அதற்கு வக்கில்லை என்றால் கோவில் முன் இருக்கும் ஈவேரா சிலைகளை இடித்து தள்ளுங்கள்.
மீண்டும் சொல்கிறேன். சுதந்திரத்திக்கு போராடாத, அரசு பதவிகளில் இல்லாத, சமூக ரீதியில் ஆலய நுழைவு போன்ற, எந்த ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்காத ஒரு “பிரிடிஷ் அடிமைக்கு” தமிழகத்தில் பல இடங்களில் சிலை வைத்திருப்பது சட்டப்படி செல்லாது.
பதவிகளில் இல்லாத, சமூக ரீதியில் ஆலய நுழைவு போன்ற, எந்த ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்காத ஒரு “பிரிடிஷ் அடிமைக்கு” தமிழகத்தில் பல இடங்களில் சிலை வைத்திருப்பது சட்டப்படி செல்லாது.
எந்த தகுதியின் அடிப்படையில் ஈவேராவிற்கு சிலை வைக்கப்பட்டுள்ளது என்பதை @mkstalin அரசு விளக்கவேண்டும்.
அ.அஸ்வத்தாமன்,
மாநில செயலாளர், பாஜக