என்டிடிவி.,யின் ரூ.900 கோடி வரி ஏய்ப்பு: பெண்களை வைத்து அதிகாரியை மடக்குவதாக அம்பலப்படுத்துகிறார் எஸ்.குருமூர்த்தி

s.gurumurthy - 2026

சென்னை:

புது தில்லியில் இருந்து இயங்கி வரும் என்.டி.டி.வி.,யின் வரி ஏய்ப்பு முயற்சிகள் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் பத்திரிகையாளரும் ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி.

அதில், என்.டி.டி.வி., ரூ.900 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டறியப் பட்டதாகவும், அதனை வெளிப்படுத்திய வருமான வரித்துறை அதிகாரி ஸ்ரீவஸ்தவாவை இரு பெண்களை வைத்து என்.டி.டி.வி பொய் பாலியல் புகார் அளித்து மடக்க தொடர்ச்சியாக முயன்று வருவதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவுகள்…

வருமான வரித்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் இருவர் என்டிடிவி சானலுக்கு, ஆதரவாக அவர்களின் பிரதிநிதிகளாகச் செயல்பட்டது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. சஞ்சய் ஸ்ரீவஸ்தவா மீது அவர்கள் இருவரும் பாலியல் புகார்களைக் கொடுத்தனர். ஆனால், அவர்கள் அளித்த பாலியல் புகார்கள் பொய்யானவை என்பது தெரிய வந்துள்ளது. பொய்ப் புகார் அளித்த அவர்கள் அது குறித்து அமைக்கப்பட்ட புலனாய்வு கமிட்டிக்கு முன்னர் ஆஜராகவில்லை.

ALSO READ:  பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

அந்தக் கமிட்டி, 9.12.2012ல் ஸ்ரீவஸ்தவா மீது கொடுக்கப்பட்ட அந்தப் பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று தெரிவித்தது. அவர்கள் குறித்த ஸ்ரீவஸ்தவாவின் கடிதங்கள் பற்றிய விசாரணையில் அவை அவதூறானவை என்பது தெரிந்தது.

அந்தப் பெண்கள் அவருடனோ, அவருக்குக் கீழோ ஒருபோதும் பணியாற்றவில்லை என்பதும் அம்பலமாகியுள்ளது. இதற்காக 5 நபர் கொண்ட கமிட்டி ஸ்ரீவஸ்தவாவை விசாரித்தது. அவர்களில் 4 பேர் பெண்கள். இருப்பினும் அந்த இரண்டு பெண்களும் அரசிலுள்ள முக்கிய நபர்களைச் சந்தித்து ஸ்ரீவஸ்தவா குறித்து பொய்யான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகின்றன.

சிபிடிடி (செண்ட்ரல் போர்ட் ஆஃப் டைரக்ட் டாக்சேஷன்) யில் உள்ள ப.சிதம்பரத்தின் கிடுக்கிகள் அவர்களை ஆதரித்து வருகின்றனர். ஆனால், இந்த அரசில் உள்ள ஒரு சில நண்பர்களின் துணையுடன் செயல்படும் என்டிடிவிக்கு எதிராக ஸ்ரீவஸ்தவா ஒற்றை நபராகப் போராடி வருகிறார். என்னைப் போன்ற ஒரு சிலர் மட்டுமே அவரை ஆதரிக்கின்றனர்.

என்.டி.டி.வி ரூ.900 கோடி வரி ஏய்ப்பு முறைகேடு மற்றும் நிதி முறைகேடு செய்துள்ளதை ஸ்ரீவஸ்தவா ஆதாரமாக வைத்துள்ளார்.

ALSO READ:  ₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

இந்நிலையில் அந்த இரு பெண்களும் உச்ச நீதிமன்றத்தை அணுகி, ஸ்ரீவஸ்தவா தங்களிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக பொது நல மனு கொடுத்தனர். இதில் எங்கே பொது நலன் உள்ளது தெரியவில்லை.

அந்த மனுவை உச்ச நீதிமன்றமும் ஏற்றது. இப்போது, அவர்கள் புதிதாக ஒரு மனு அளித்துள்ளனர். அவர்களின் மதிப்பீட்டு உத்தரவுகள் விலக்கப்பட வேண்டும் என்று. நீதித்துறை வரலாற்றில் இதுவரை, பொது நல மனு மூலம் வருமான வரித்துறை சட்டத்தின் கீழ் அதன் சொந்த விதிமுறைகளைக் கொண்டு தனிநபர் நலனுக்கான நிவாரணம் பெறுதல் என்பது நடந்திராதது. இந்த விவகாரத்தில் பெரிய ஊடகங்கள் மவுனம் சாதிக்கின்றன.

உண்மையைச் சொன்னால், அது ஊடக ஒற்றுமையைக் குலைக்கும் விதத்தில் அமைந்துவிடும் என்பதைக் காரணம் காட்டி வாய்மூடியுள்ளன.

ALSO READ:  போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories