December 6, 2025, 6:14 AM
23.8 C
Chennai

ஓப்போ வாட்ச் ஃப்ரீ’ ஸ்மார்ட்வாட்ச் : சிறப்பம்சங்கள்..!

Oppo Watch Free Smartwatch - 2025

ஓப்போ’ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ‘ஓப்போ வாட்ச் ஃப்ரீ’ ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் வருகிற பிப்.4 ஆம் தேதி அறிமுகமானது.

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ வாட்ச் பிரீ (Oppo Watch Free) ஸ்மார்ட்வாட்சை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

அமோலெட் தொடுதிரையுடன் வரும் இந்த ஸ்மார்ட்வாட்சின் விலை ரூ.5,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒப்போ நிறுவனம் பிப்ரவரி 4ஆம் தேதி தனது ரெனோ 7, ரெனோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

இதனுடன் தனது புதிய ஒப்போ வாட்ச் பிரீ ஸ்மார்ட்வாட்சையும் அறிமுகப்படுத்தியது. இந்த தகவல் சாதனங்கள் முன்னதாகவே சீன சந்தையில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெளியான ஒப்போ வாட்ச் பிரீ ஸ்மார்ட்வாட்ச் (Oppo Watch Free) அமோலெட் (AMOLED) தொடுதிரையுடன் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் திரையின் அளவு 1.64″ அங்குலமாக உள்ளது. இது 280 x 456 பிக்சல் ரெசலியூஷனைக் கொண்டது. 16.7 மில்லியல் பிக்சல் நிற ஆதரவும் இதில் உள்ளது. 2.5டி கிளாஸ் பாதுகாப்பும் இந்த திரைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

oppo watch - 2025

ஸ்மார்ட்வாட்சில் ப்ளூடூத் 5.0 இணைப்பு ஆதரவு உள்ளது. 6-ஆக்சிஸ் அக்செலரேஷன், கைரோஸ்கோப் சென்சார், ஆப்டிகல் இதய துடிப்பு சென்சார், ஆப்டிகல் ரத்த ஆக்ஸிஜன் சென்சார், சுற்றுப்புற ஒளி சென்சார் ஆகியன கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஒப்போ வாட்ச் பிரீ ஸ்மார்ட்வாட்ச் இரு வண்ணத் தேர்வுகளில் அறிமுகம் ஆகியுள்ளது. வென்னிலா, கருப்பு ஆகிய நிறங்களில் இது கிடைக்கிறது.

தோற்றத்தில் ஹானர் நிறுவனத்தின் ஸ்மார்ட்பேண்ட் போலவே ஒப்போ வாட்ச் பிரீ ஸ்மார்ட்வாட்சின் வடிவமைப்பு உள்ளது. இதில் நடப்பது, ஓடுவது, சைக்ளிங், ஸ்கிப்பிங், இறகுபந்து, கூடைபந்து, கால்பந்து, ஜாக்கிங், ஹைக்கிங், டென்னிஸ், ரக்பி, கோல்ஃப், யோகா, உடற்பயிற்சி, பேஸ்பால் போன்றவைகளை தொடர்ந்து கண்காணிக்கும் அம்சங்கள் உள்ளது.

Oppo Watch Free ஸ்மார்ட்வாட்சின் ஸ்டிராப், சிலிக்கானால் உருவாக்கப்பட்டது. மிகவும் நேர்த்தியாக இது தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்சின் மொத்த எடை 32.6 கிராமாக உள்ளது.

வாட்ச் ஸ்டிராப் இல்லாமல் இதன் எடை 20.9 கிராமாக உள்ளது. இந்த வடிமைப்பில் சில வாட்சுகளே சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, இந்த டிசைனை விரும்பும் மக்களிடம், பெரும் போட்டி இல்லாமல் இந்த ஸ்மார்ட்வாட்ச் சென்றடையும் என்று நம்பலாம்.

இந்த ஸ்மார்ட்வாட்ச் 5 ஏடிஎம் நீர் பாதுகாப்பு அம்சத்துடன் வருகிறது. ஒப்போ வாட்ச் பிரீ ஸ்மார்ட்வாட்சானது 230mAh பேட்டரி திறன் கொண்டு செயல்படுகிறது.

இதனை ஊக்குவிக்க 5V திறன் கொண்ட மேக்னெட்டிக் சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 14 நாள்கள் வரை இந்த ஸ்மார்ட்வாட்சை பயன்படுத்தலாம்.

மெசேஜ், அழைப்புகளுக்கான நோட்டிபிகேஷனும் போன்ற அம்சங்களும் உள்ளது. இந்தியாவில் 5,999 ரூபாய்க்கு இந்த ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories