December 6, 2025, 6:28 AM
23.8 C
Chennai

கொரோனா பரவலால்… இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரிப்பு!

online vegetables sales
online vegetables sales

கொரோனா என்ற வைரஸ் பரவலால் இப்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்திருக்கிறது. கொரோனா அச்சத்துக்கு மத்தியில், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுங்க என்று சொல்லிச் சொல்லி, சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பயன்பாடு அதிகரித்துள்ளது. அது, மளிகை பொருட்கள், மின்சார பில்கள் மற்றும் வண்டி கட்டணங்கள் என அனைத்திற்குமான பயன்பாடாக மாறியிருக்கிறது .

2016 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளால் உருவாக்கப்பட்ட யுனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸில் (Unified Payments Interface) பரிவர்த்தனைகளின் அளவு, கடந்த மாதம் பெரிதும் உயர்ந்திருந்தது.

கொரோனா நோய்த் தொற்றுக்கு மத்தியில் ரூபாய் நோட்டுகளை கையாள மக்கள் அச்சம் கொண்டிருந்தனர். ஏப்ரல் மாதத்தில் பொருளாதார நடவடிக்கைகள் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்ட நிலையில், வீழ்ச்சியடைந்த வங்கிகளிடமிருந்து மின்னணு நிதி பரிமாற்றங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன.

“ஆன்லைனில் இதுவரை பில் செலுத்தாதவர்கள் கூட தற்போது ஆன்லைனில் பணம் செலுத்துகிறார்கள்! ஆன்லைனில் மளிகை சாமான்களை வாங்காதவர்கள் கூட தற்போது ஆன்லைனில் வாங்குகிறார்கள்…

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வெகுநாட்களாகவே இந்தியாவுக்கான டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை கொண்டுவர முயற்சி செய்தது. அது இப்போது பலன் அளிக்கத் தொடக்கியிருக்கிறது.

கடந்த நவம்பர் 2016ல் மோடி திடீரென நாட்டின் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் மாற்று நோட்டுகளை வாங்கிக் கொள்ளுமாறும் கூறினார். ஊழலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இவ்வாறு மத்திய அரசால் அறிவிக்கப் பட்டது.

அப்போது மக்கள் ரூபாய் நோட்டுகளைப் பெற சிரமப்பட்டதால் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மாற்றாக உருவெடுத்தன. அவை தொடக்கத்தில் அதிக அளவைல் பரிவர்த்தனை செய்யப் பட்டன. ஆனால் புழக்கத்தில் இருந்த நோட்டுகளின் அளவு மீண்டும் உயர்ந்ததால் அவை பணமாகவே பரிவர்த்தனை செய்யப்பட்டன.

இந்நிலையில் இப்போது தொற்றுநோய், சமூக விலகல், ஒவ்வொருவருக்கும் இடையிலான இடைவெளியைப் பேணுதல் என்ற நிலையில், மக்களை எச்சரிக்கை அடையச் செய்து, ஆன்லைனுக்கு மாற்றியுள்ளது.

இப்போது ஆன்லைன் பயன்பாடுகள் மூலம் காய்கறிகள், பால், பழங்கள் மற்றும் அனைத்து வகையான தினசரி தேவைகளையும் வாங்குவதாகவும், பணத்தை பரிமாறிக் கொள்வதன் மூலம் வைரஸ் தொற்று ஆபத்து ஏற்படலாம் என்பதால், அதனை தாம் விரும்பவில்லை என்றும் பலர் கூறுகின்றனர்.

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் சந்தை இவ்வாறு டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தி, நுகர்வோருக்கு எளிய வசதியை அளிக்கிறது. அதே நேரம், இதில் பாதுகாப்பு அம்சங்கள் மேலும் உறுதிப் படுத்தப் பட்டால், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கே முழுமையாக மக்கள் மாறிக் கொள்ளும் காலமும் வந்துவிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories