காக்கி பட உரிமையை வாங்கியது இன்பினிட்டி ஃபில்ம் வென்சர்ச்

Published:

police protk - 2026

இயக்குனர் விஜய் மில்டன் – விஜய் ஆண்டனி கூட்டணியில் புதிய திரைப்படத்தைத் தயாரித்து வரும் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ், ஏ. செந்தில்குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் “காக்கி” திரைப்படத்தின் உரிமைகளை வாங்கியிருக்கிறது.

இந்தப் படத்தில் விஜய் ஆன்டனி, சத்யராஜ், ஸ்ரீகாந்த், இந்துஜா, ஈஸ்வரி ராவ், ஜான் விஜய்,  ரவி மரியா, கதிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

ஜூன் மாதத்தில் துவங்கி ஏறத்தாழ 50 சதவீத படப்பிடிப்பு வேலைகள் ஷிமோகா , பெங்களூரு, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பில் நிறைவடைந்திருக்கிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வேலைகள் அக்டோபர் மாதத்தில் நிறைவு பெறும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் ஏ.செந்தில் குமார் இயக்கத்தில், பிரபலமான  ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஸாவின் ஒளிப்பதிவில், அவ்கத்  இசையில் வைர முத்துவின் பாடல் வரிகளில், கனல் கண்ணன் – ஷியாம் – ன் அதிரடி காட்சி அமைப்பில், தயாராகும் இப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு பொறுப்புகளை கவனித்துக் கொள்கிறார். 

இப்படம் அதிரடி காட்சிகளின் பின்னணியில் உருவாகி வரும் ஒரு ஜனரஞ்சகமான குடும்பப் பாங்கானப்  பொழுதுபோக்குப் படமாகும்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் குழு இதுவரை தயாராகியிருக்கும் இப்படத்தின்  எடிட் செய்த பதிப்பினைப் பார்வையிட்ட பின்னர், கதையின் ஆழத்தையும், தகுதிகளையும் கருத்தில் கொண்டு, இப்பட உரிமைகளை வாங்கிட தீர்மானித்தது.மேலும், தயாரிப்பாளர் “ஓபன் தியேட்டர்” உடன் இணைந்து, மார்க்கட்டிங், விநியோகம் மற்றும் விளம்பரம் ஆகியவற்றில் இணைந்துப் பணியாற்றவும் முடிவு செய்திருக்கிறது.

ஜனவரி 2020ல் இப்படத்தை வெளியிட  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில்,  “பர்ஸ்ட் லுக்” போஸ்டர்களை இந்த ஆண்டு செப்டம்பர் மாதமும், டீசர் | டிரைலரை அக்டோபர் மாதமும் வெளியிட இப்படக்குழு முடிவு செய்திருக்கிறது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img