நானும் மீ டூ பிரச்னைகளை சந்தித்துள்ளேன். சினிமாவில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதாக கூறி பாதிக்கப்பட்ட பலர் #metoo என்ற டேக் மூலம் பேசப்பட்டு வருகின்றனர். இதில் சிலர் சிக்கினர்.
இந்நிலையில் நடிகை வரலட்சுமி தான் இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்துள்ளதாக கூறியுள்ளார். இதில் அவர் தான் சினிமா பிரபலங்களின் வாரிசு என தெரிந்த பின்னும் தன்னை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர்.
தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் அட்ஜெஸ்ட் செய்யும்படி கேட்டார்கள், அதுபோன்ற ஒரு வாய்ப்பு எனக்கு தேவையில்லை என மறுத்துவிட்டேன். அது போல என்னிடம் பேசியவர்களின் ஆதாரம் என்னிடம் உள்ளது. எல்லாம் நடந்து முடிந்த பின் பெண்கள் புகார் தெரிவிப்பது ஏற்க முடியாதது. பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.