கோவில் சுவர்களில் சிகப்பு வெள்ளை வர்ணம் பூசுவது ஏன்?
நம் முன்னோர்கள் உருவாகிய ஒவ்வொன்றிற்கும் பின்னால் காரணங்கள் இருக்கின்றன.
பொதுவாக நீங்கள் இந்து கோவில்களுக்கு செல்லும் போது கோவில் சுவரில் வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் கோடுகள் பூசப் பட்டிருக்கும். பார்த்திருப்பீர்கள். ஏன் இப்படி வெள்ளை நிற சுவரில் செங்கல் காவிநிறத்தில் பட்டை தீட்டுகிறார்கள்.
நம் உடலில் வெள்ளை அணுக்கள் மற்றும் சிகப்பு இரத்த அணுக்கள் உள்ளன. சிகப்பு அணுக்கள் ஆக்சிஜனை நம் உடலின் எல்லா பாகங்களுக்கும் கொண்டு செல்கிறது மற்றும் வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது. இவை இரண்டும் நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதவை.
இதைக் குறிக்க தான் வெள்ளை மற்றும் சிகப்பு நிறங்களில் கோவில்களின் சுவர்களில் பூசப்பட்டிருக்கலாம் .
ஆண்களின் விந்து வெள்ளை நிறம் மற்றும் பெண்களின் கருப்பை சிகப்பு நிறத்தில் இருக்கும். இவை இரண்டும் சேர்ந்து தான் இங்கே உயிர் ஜனனம் ஏற்படுகிறது. இறைவனின் ஆன்மா மூல ஸ்தானத்தில் இருக்கும். அதனால் தான் அதை கருவறை என்று கூறுகிறார்கள். சுவர்களில் உள்ள வர்ணங்கள் இவைகளை சான்றாக வைத்தும் நமக்கு வாழ்வியலை உணர்த்துகின்றன.