மொட்டை போட்டு புருவத்தையும் எடுத்த மாதிரி இருக்கிறது இன்றைய இசை : இளையராஜா

Ilayaraja hero image - 2026

சென்னை:
திருப்பதி சென்று மொட்டை போட்டுவிட்டு, புருவத்தையும் சேர்த்து எடுத்தது மாதிரி உள்ளது இன்றைய இசையில் நிலைமை என்று இசைஞானி இளையராஜா வேதனை தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக, ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்தவர். இவர், தன் ஒலிப்பதிவுக் கூடத்தில் தனது இசைக்குழுவைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது…

“நான் இசையமைத்த அந்த நாற்பது வருட காலம் எல்லாம் இப்போது முடிந்துவிட்டது. இசைக்கலைஞர்கள் எல்லாரும் முழுதாக அமர்ந்து பாடகர்களுடன் பாடி, இசையமைத்து, ஒலிப்பதிவு செய்வது என்பதெல்லாம் இனி இந்த உலகில் நடக்கப் போவதில்லை, அந்தக் காலக்கட்டம் முடிந்துவிட்டது. இன்றைக்கு இசையமைப்பாளர்கள் இல்லை, இசை அமைப்பவர்கள் இல்லை, இசை வாசிப்பாளர்கள் இல்லை, பாடுபவர்கள் இல்லை. சும்மா ஏதோ செய்து கொண்டிருக்கிறோம்.

சினிமாவில் வந்து கைய கால ஆட்டுகிறது போல், சண்டை போடுபவர்கள் எல்லாம் சண்டையா போடுகிறார்கள்? அது மாதிரிதான் இங்கே பாடுறவனும் பாடப் போவதில்லை. ஏனென்றால் நல்ல டியூன் இல்லை. இந்த இசை எவ்வளவு உயர்ந்தது, எத்தனை ராகங்கள், எத்தனை கலப்புகள், எவ்வளவு வாத்தியக் கருவிகள், வாசிக்கிற விதங்களில் எத்தனை எத்தனை பாவங்கள், எத்தனை உணர்வுகள், எத்தனை உணர்வு பூர்வங்கள்… எல்லாம் போயாச்சு.

திருப்பதியில் போய் மொட்டை போட்டுவிட்டு, புருவத்தையும் சேர்த்து எடுத்தது போல்தான் இருக்கிறது இன்றைய இசையின் நிலை. இப்போது இசையுலகத்தில் இசையமைப்பாளர்களே கிடையாது என்று ஆகிவிட்டது. இந்தியா முழுக்க இதே நிலை தான். இசை உலகம் சிதைந்துவிட்டது என்றார் வருத்தத்துடன்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories