மொட்டை போட்டு புருவத்தையும் எடுத்த மாதிரி இருக்கிறது இன்றைய இசை : இளையராஜா

Ilayaraja hero image - 2026

சென்னை:
திருப்பதி சென்று மொட்டை போட்டுவிட்டு, புருவத்தையும் சேர்த்து எடுத்தது மாதிரி உள்ளது இன்றைய இசையில் நிலைமை என்று இசைஞானி இளையராஜா வேதனை தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக, ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்தவர். இவர், தன் ஒலிப்பதிவுக் கூடத்தில் தனது இசைக்குழுவைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது…

“நான் இசையமைத்த அந்த நாற்பது வருட காலம் எல்லாம் இப்போது முடிந்துவிட்டது. இசைக்கலைஞர்கள் எல்லாரும் முழுதாக அமர்ந்து பாடகர்களுடன் பாடி, இசையமைத்து, ஒலிப்பதிவு செய்வது என்பதெல்லாம் இனி இந்த உலகில் நடக்கப் போவதில்லை, அந்தக் காலக்கட்டம் முடிந்துவிட்டது. இன்றைக்கு இசையமைப்பாளர்கள் இல்லை, இசை அமைப்பவர்கள் இல்லை, இசை வாசிப்பாளர்கள் இல்லை, பாடுபவர்கள் இல்லை. சும்மா ஏதோ செய்து கொண்டிருக்கிறோம்.

சினிமாவில் வந்து கைய கால ஆட்டுகிறது போல், சண்டை போடுபவர்கள் எல்லாம் சண்டையா போடுகிறார்கள்? அது மாதிரிதான் இங்கே பாடுறவனும் பாடப் போவதில்லை. ஏனென்றால் நல்ல டியூன் இல்லை. இந்த இசை எவ்வளவு உயர்ந்தது, எத்தனை ராகங்கள், எத்தனை கலப்புகள், எவ்வளவு வாத்தியக் கருவிகள், வாசிக்கிற விதங்களில் எத்தனை எத்தனை பாவங்கள், எத்தனை உணர்வுகள், எத்தனை உணர்வு பூர்வங்கள்… எல்லாம் போயாச்சு.

திருப்பதியில் போய் மொட்டை போட்டுவிட்டு, புருவத்தையும் சேர்த்து எடுத்தது போல்தான் இருக்கிறது இன்றைய இசையின் நிலை. இப்போது இசையுலகத்தில் இசையமைப்பாளர்களே கிடையாது என்று ஆகிவிட்டது. இந்தியா முழுக்க இதே நிலை தான். இசை உலகம் சிதைந்துவிட்டது என்றார் வருத்தத்துடன்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories