நான் சக நடிகர்களுடன் முத்தக்காட்சியில் நடித்தாலோ அல்லது நிர்வாணமாக நடித்தாலோ என கணவர் கண்டுகொள்ள மாட்டார். ஏனெனில் அவர் என்னை நன்றாக புரிந்து வைத்துள்ளார் என்று நடிகை சர்வீன் சாவ்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேட்டி ஒன்றில் கூறியதாவது: எனது கணவர் தனது தொழில்முறை விருப்பங்களை ஆதரிக்கிறார். நான் என்னுடன் நடிக்கும் சக நடிகரை கிஸ் செய்தாலும். ஏன் நிர்வாணமாக நடித்தாலும்கூட என் கணவர் எதுவும் சொல்லமாட்டார். அந்தளவுக்கு அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். அவர் என்னை புரிந்து வைத்து உள்ளார். அதனால் தான் அவரை திருமணம் செய்துகொண்டேன்”
நடிகை சர்வீன் சாவ்லா தமிழில் சேரன் நடித்த ‘மூன்று பேர் மூன்று காதல் மற்றும் அர்ஜூன் நடித்து இயக்கிய ‘ஜெய்ஹிந்த் 2 ஆகிய இரண்டு படங்களில் மட்டும் நடித்துள்ளார். தற்போது ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது