நடிகரும் கதையாசியருமான ஈரோடு சௌந்தர் மரணம்…

Published:

erode

தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு முன்பு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் ஈரோடு சவுந்தர்.

குறிப்பாக சேரன் பாண்டியன், நாட்டாமை உள்ளிட்ட சில முக்கிய வெற்றி படங்களுக்கு கூட இவர்தான் வசனகர்த்தா. மேலும், நாட்டாமை உள்ளிட்ட கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படங்களில் சின்ன சின்ன காட்சிகளில் நடித்து வந்தார். சரத்குமார் நடித்த சிம்மராசி படத்தை இயக்கியும் உள்ளார்.

இந்நிலையில், நேற்று அவர் மரணமடைந்துள்ளார். அவரின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img