ஏழு கதாநாயகியர்; நாயகனாக பிரஜன் நடிக்கும் ‘மிரண்டவன்’

prajan-mirandavan ஸ்ரீ விஷ்ணு புரொடக்சன்ஸ் மற்றும் ஜெ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க முரளி கிருஷ்ணா இயக்க.. ஏழு கதாநாயகிகளுடன் பிரஜன் நடிக்கும் ”மிரண்டவன்” ‘பார்வை ஒன்றே போதுமே’, ‘பேசாத கண்ணும் பேசுமே’, ‘திருடிய இதயத்தை’, ‘பலம்’ ஆகிய வெற்றிப்படங்களின் இயக்குனர் முரளி கிருஷ்ணாவின் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் மிரண்டவன். படத்தை ஸ்ரீ விஷ்ணு புரொடக்சன்ஸ் மற்றும் ஜெ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. நாயகனாக பிரஜின் நடிக்கிறார். முக்கிய கதாநாயகியாக அவள் பெயர் தமிழரசி, வீரம் படங்களில் நடித்துள்ள மனோசித்ரா நடிக்கிறார். இவருடன் சருணா, அஞ்சு கௌடா, சுவாதி, சவேரா, ஐஸ்வர்யா, ஜெஸ்சி ஆகிய ஆறு கதாநாயகிகளும் படத்தின் மையப் புள்ளிகளாக சுழலும் வகையில் கதை பயணிக்கிறது. மிக முக்கியமான கதாபத்திரத்தில் ஜின்னா மற்றும் மகேந்திரன் நடித்துள்ளனர். கலர்ஃபுல்லான இப்படத்தில் காதல் த்ரில் சேசிங் என பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. எப்போதுமே அந்தந்த சமயங்களில் பரபரப்பாகப் பேசப்படும் நிகழ்வை படமாக்குவார் முரளிகிருஷ்ணா. இப்படத்தில் சமீப காலமாக நடைபெறும் பிளாக் மெயில் என்ற க்ரைமை கையிலெடுத்துள்ளார். பிளாக் மெயில் படத்தில் ஏழு பெண்களா? ஏழு பேருமே கதாநாயகிகளாகவா வருகிறார்கள் என இயக்குனர் முரளி கிருஷ்ணாவிடம் பீதியுடன் கேட்டால்.. ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு நடித்துள்ளனர். யாருக்கும் ஒரு சீன் முன்ன பின்ன இருக்காது. எல்லோருமே முக்கியத்துவம் கொண்ட கதையில் ட்விஷ்ட்களாக பயன்படுத்தப்பட்டுள்ளனர். மிரண்டவன் சமூகத்தின் கைவிலங்காக இருக்கும் ஒரு சம்பவத்தை படம் போட்டுக் காட்டும்.. தெளிவாகவும் நேர்மையாகவும் புட்டுப் புட்டு வைக்கும். நிச்சயமாக மக்களை ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லித்தரும். என் படங்களில் எப்போது பாட்டுக்கள் காதுகளை இனிக்கச் செய்துவிடும். மிரண்டவன் படத்திலும் அந்த ஜாலம் இருக்கும் என்கிறார் இயக்குனர் முரளி. ஒளிப்பதிவை ஜெகதீஷ் கையாள்கிறார். எடிட்டிங்- வில்சி. கலை இயக்குனர் குமார். நடனம் ரவிதேவ் செய்திருக்கிறார். கதை திரைக்கதை வசனமெழுதி இயக்கியுள்ளார் முரளி கிருஷ்ணா. சென்னை, பாண்டிச்சேரி, திருச்சி, மற்றும் கேரளா காடுகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

ஐபிஎல் 2026: எங்கே போகிறது சென்னை அணியின் பயணம்?

சென்ணையில் நடந்த இந்தாஅட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பரிதாபமாகத் தோல்வியடைந்தது.

Entertainment News

Popular Categories