இளையராஜா மீதான விமர்சனம்: ட்விட்டரிலிருந்து வெளியேறிய ஜேம்ஸ் வசந்தன்!

Published:

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவிடம் செய்தியாளர் ஒருவர் சிம்பு பாடிய பீப் பாடல் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது கோபமடைந்த இளையராஜா, அவரை திட்டி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுபற்றி இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தன் ட்விட்டர் பக்கத்தில் இளையராஜாவை தாக்குவது போல் ஒரு சில கருத்துக்களை தெரிவித்தார்.

இதனால் ரசிகர்கள் பலரும் அவரை திட்ட, ஜேம்ஸ் வசந்தன் டுவிட்டரை விட்டே வெளியேறினார். தற்போது இதற்கு மன்னிப்பு கேட்கும் படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், சமீபத்தில் நான் ராஜா சார் பற்றிக் கூறிய கருத்துகள் மிகவும் பூதாகரமாக வெடித்து உள்ளது. இந்த சர்ச்சையை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், ராஜா சாருடைய ரசிகர்கள் பலர் என்னுடைய இந்தக் கருத்தால் காயமுற்றதால் தான் இந்த மன்னிப்பு அறிக்கை.

இதே நேரத்தில் சில விஷமிகள் என்னுடைய பெயரையும், படத்தையும் வைத்துக் கொண்டு அவதூறான கருத்துகளையும், பரப்புரையும் செய்து வருகிறார்கள். அதனால் தான் நேற்றே என்னுடை ட்விட்டர் தொடர்பையும் விட்டு விட்டேன். இந்த அறிக்கை மூலம் நான் என்னுடைய நிலையை தெளிவு செய்துக் கொள்ள விரும்புகிறேன்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

நான் என்னுடைய மனதில் உள்ளதை பேசுபவன், யார் மனதை புண் படுத்தவோ குறிப்பாக தமிழ் சமுதாயத்தை சேர்ந்தவர்களை புண்படுத்தவோ நினைக்க கூட செய்யாதவன். நடந்த சம்பவங்களை மறந்து முன்னேறுவோம். நன்ற!!!”.

Related articles

Recent articles

spot_img