ஊடகங்களின் ‘உயிர் அச்ச ஃபோபியா…!’

Published:

media action1 - 2026

ஒரு குட்டி அரசியல்வாதி முதல் தேசிய அரசியல் கட்சி வரை பொதுவான வியாதி, முஸ்லிம்களை கெஞ்சுவது! 1940களில் காந்தி, ஜவஹர்லால் நேருவால் முன்வைக்கப் பட்ட இந்த கோழைத்தனம், தொடர்ந்து வந்து, ஒரு தொல்லையாகவே மாறிப் போயுள்ளது. இப்போதும், அரசியல் மைலேஜ் எடுப்பதற்கு இதுவே ஒரு வழி ஆகிவிட்டது.

ஒவ்வொரு நாடும் அதன் நிலச் சட்டத்தால் ஆட்சி செய்யப் படுகிறது. அண்மைய ஆண்டுகளில் உலகமே ஒரு பொதுவான பிரச்னையை காண்கிறது. ஆம். அடிப்படைவாத இஸ்லாமியர்கள் எல்லா இடங்களிலும் பெரும் தொல்லையாக மாறி வருகின்றனர். அவர்கள் எந்த நாட்டிலும், அதன் நிலச் சட்டத்தை மதிப்பதில்லை; அவர்கள் மீண்டும் மீண்டும் மதத்தை முன்னிறுத்தி வன்முறையிலேயே இறங்குகின்றனர்.

அண்மையில் தில்லியில் சிஏஏ எதிர்ப்புக் கூட்டங்கள் என்ற பெயரில் முஸ்லிம்களின் வன்முறைப் போராட்டங்களை நாடு கண்டது. இதில் ஏராளமான பொதுச் சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. இஸ்லாமியர்கள் நாட்டின் சட்டத்துக்குக் கட்டுப்படாதவர்களாகவே மாறி வருகிறார்கள். இந்த உண்மைகளை அறிந்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் அவர்களிடம் மன்றாடுகின்றன.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?
media action - 2026

தற்போது கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைக்கின்ற சூழலில், உலக மக்களை அச்சுறுத்தலில் தள்ளி இருக்கின்ற நேரத்தில், வைரஸில் இருந்து விலகியிருப்போம், தனித்திருப்போம் என்று உலகமே அதற்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், தில்லியில் ஒன்றாகக் கூடி மாநாடு போடுவதும், அதற்கு மதத்தின் பெயாரால் தற்காப்பு தேடி அராஜகத்தில் இறங்குவதும் இப்போது இந்திய மக்களிடையே பெரும் முகச்சுளிப்பை வரவழைத்துள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு வந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பலர், தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளாமல், தலைமறைவாகியுள்ளனர். குற்றங்களைச் செய்துவிட்டு, மசூதிகளில் தஞ்சம் புகும் வழக்கமான செயல்களைப் போல் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு, கொரோனா அச்சத்தால் தலைமறைவாகி தங்கள் செல்போன்களையும் ச்விட்ச் ஆஃப் செய்து விட்டு இருக்கும் அளவுக்கு இதில் என்ன இருக்கிறது?! அவர்கள் செய்த குற்றச்செயல்தான் என்ன? ஒன்றுமேயில்லை!

தாங்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டது தவறில்லை, ஆனால், வெளிநாட்டு நபர்களுடன் கலந்து இருந்து விட்டு வந்ததால், தங்களைத் தாங்களே அரசிடம் அறிவித்து அரசின் தயவில் இலவச மருத்துவ சிகிச்சையும் பெற்று, தாங்களும் குணமடைந்து தங்கள் உற்றத்துக்கும் சுற்றத்துக்கும் வைரஸைப் பரப்பாமல் இருக்கலாமே!

ALSO READ:  குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

ஆனால் இவர்கள் செயவது, தமிழக அரசு அவ்வளவு கெஞ்சியும் தங்களை அவர்கள் மறைத்துக் கொள்கிறார்களே தவிர நிலைமையின் விபரீதத்தை உணர்ந்தவர்களாகத் தெரியவில்லை.

இவர்கள் குறித்து தகவல் தெரிவித்து, செய்தியை நேர்மையாக எடுத்துரைக்க வேண்டிய தமிழக ஊடகங்கள், இவற்றை மறைத்து மிகப்பெரிய குற்றவாளிகளாக தமிழக மக்கள் முன் தலையைத் தொங்கப் போட்டு நிற்கிறார்கள். முஸ்லீம்கள் என்று வரும்போது தமிழக ஊடகங்கள் உண்மையை மறைத்து பொது மக்களின் கவனத்தை திசை திருப்புவதை பலரும் கண்டிக்கத்தான் செய்கிறார்கள். தமிழக டிவி சேனல்கள் மோடி எதிர்ப்பு & திமுக சார்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமே உள்ளன என்பதை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வருகின்றன.

இவர்கள் தங்கள் சொந்த சமூகத்தின் மக்களின் வாழ்க்கையை பெரும் ஆபத்தில் வைக்கின்றனர். இது அவர்களை கட்டுப் படுத்த வேண்டிய நேரம், தாஜா செய்யும் நேரமல்ல. அனைத்து மாநில அரசுகளும் இந்த தயக்கத்தை கைவிட்டு இதயமற்ற குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசும் ஊடகங்களும் தங்கள் பொறுப்புகளை உணர வேண்டும்.

  • கே.வி.சிவராமன் ஐயர், மும்பை
ALSO READ:  எல்லைக்கு உள்ளும் புறமும்... பிரதமரை குறி வைக்கும் அபாயம்!

#STOP_APPEASING_CRIMINALS_AND_SAVE_LAW_ABIDING_CITIZENS.

#Its_Enough_Wake_Up_Hindus_India.
#Muslims_are_always_Muslims_Stop_Appeasing_them.

Related articles

Recent articles

spot_img