‘ஊடக ஜிகாத்’: தப்ளிக் ஜமாத் செய்தி போட்ட சக நிருபரை சரமாரியாக தாக்கிய ‘நிருபர்!

mathicartoon hands - 2026

மீடியோ ஜிகாத் என்ற சொல்லுக்குள் அடங்கும் விதத்தில் வெளியாகியுள்ளது இந்தச் செய்தி. இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஊடகங்களில் பணிபுரிந்தால் என்ன நடக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம் என்கிறார்கள் சக பத்திரிகையாளர்கள்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து புது தில்லி சென்று திரும்பிய ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது குறித்து நேற்று செய்தி வெளியானது. இதற்காக தினமணி இதழின் செய்தியாளர் மீது செவ்வாய்க்கிழமை நேற்று தாக்குதல் நடத்தியதாக, மற்றொரு நாளிதழின் (இஸ்லாமிய) செய்தியாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுதில்லியில் நடைபெற்ற இஸ்லாமிய தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஒன்பது பேர் சென்றுள்ளனர். அந்த மாநாட்டிற்குச் சென்றவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து கொரோனா வைரஸ் தொற்று குறித்து சுகாதாரத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஒட்டன்சத்திரம் பகுதியில் 5 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை குறித்து தினமணி நாளிதழின் திண்டுக்கல் பதிப்பு செவ்வாய்க்கிழமை நேற்று செய்தி வெளியானது. இதனை அறிந்த மற்றொரு நாளிதழின் செய்தியாளர் ஷேக் பரீத் தினமணி நாளிதழின் ஒட்டன்சத்திரம் செய்தியாளர் திருமலைசாமியிடம் கடும் வாக்குவாதம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஷேக் பரீத்தின் தூண்டுதலின் பேரில் தனியார் மருந்தக உரிமையாளர் அன்வர் தீன் மற்றும் டேனியல் ஆகியோர் இணைந்து திருமலைசாமியை தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த திருமலைசாமி ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் தாக்குதல் நடத்திய மருந்தக உரிமையாளர் அன்வர்தீன் செய்தியாளர் ஷேக் பரீத் உள்ளிட்ட மூவர் மீதும் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் திருமலைசாமி புகார் அளித்துள்ளார். அதன் பேரில் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஊடகங்களில் இஸ்லாமிய அடிப்படைவாத குழுவினர் ஊடுருவி இருக்கும் சூழ்நிலையில் இதுபோன்று சக பத்திரிகையாளர் மீது, ஏன் செய்தி போட்டாய் என்று தாக்குதல் நடத்தும் அளவுக்கு நிலைமை சென்றிருப்பது மீடியா ஜிகாத்தின் பயங்கரத்தை உணர்த்துகிறது. என்ன செய்தி போட வேண்டும், எப்படி செய்தி போடவேண்டும், செய்தியை போடலாமா கூடாதா என்றெல்லாம் இத்தகைய ஜிகாதிகளிடம் கேட்டுத்தான் அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறதோ என்று அச்சம் தெரிவிக்கின்றனர் சக பத்திரிகையாளர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

Topics

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Entertainment News

Popular Categories