கொரோனாவால் களை இழந்த… பத்ராசலம் ஸ்ரீராமநவமி உத்ஸவம்!

Published:

badrachalam4 - 2026

பத்ராசலத்தில் ஸ்ரீராமநவமி உற்சவத்தின் மீது கொரோனா எஃபெக்ட். பல புதிய உத்தரவுகளோடு ஸ்ரீசீதாராமர் கல்யாணம் நடைபெறுகிறது.

ஶ்ரீசீதாராமர் கல்யாணம் நடத்துவதில் கொரோனா எஃபெக்ட் பத்ராசலம் ஶ்ரீராமர் கோவில் மீது கூட விழுந்துள்ளது.

வைபவமாக வியாழனன்று நடத்தவேண்டிய சீதாராம கல்யாணம் பல உத்தரவுகளுக்கு அடிபணிந்து நடக்க இருக்கிறது.

badrachalam3 - 2026

மிகச்சிறந்த வரலாறு கொண்ட மிதிலா வளாகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சீதாராம கல்யாணம் இந்தமுறை ஆலயத்தின் உள்ளேயே நடக்கப்போகிறது.

badrachalam5 - 2026

பத்ராசலம் என்றாலே பூலோகவைகுண்டம். சாட்சாத் ஸ்ரீராமர் அடிவைத்து நடந்த புண்ணியபூமி. அப்படிப்பட்ட பூலோக வைகுண்டத்தில் சீதாராம கல்யாணத்தை கண்ணார கண்டு களிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பக்தரின் ஆசையாக இருக்கும். மிகப்பெரிய அளவில் பக்தர்கள் வரத் தொடங்கியதால் சீதாராமர் கல்யாணத்தை நடத்துவதற்காக 1964ல் மிதிலா வளாகத்தை அமைத்தார்கள். இங்கு 25 ஆயிரம் பக்தர்கள் அமர்ந்து கல்யாணத்தை கண்டுகளிக்க முடியும்.

badrachalam1 - 2026

முதல் முறையாக பத்ராசல ராமர் ஆலயத்தின் வரலாற்றிலேயே என்றுமே காணாதபடி கொரோனா தொற்று வியாதியின் தாக்குதலால் மாநில அரசாங்கம் சீதாராம கல்யாணத்தை மிதிலா வளாகத்தில் இன்றி ராமர் ஆலயத்தின் உள்ளேயே நடத்த தீர்மானித்துள்ளது.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!
badrachalam2 - 2026

மிதிலா வளாகத்தில் ஶ்ரீராமரின் கல்யாணம் நடக்காமல் இருப்பது இதுவே முதல்முறை. இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கை.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img