அன்றைய அரசின் அனுமதியின்றியே … அந்த விமானதளம் அமைக்கப் பட்டது..! முன்னாள் ஏர்மார்ஷல் ‘பகீர்’!

Published:

air marshal retd pranab kumar babora
air marshal retd pranab kumar babora

முன்னாள் விமானப்படை தளபதி மார்ஷல் பிரணாப்பின் மனம் திறந்த பேட்டி…

இந்தியா சீனா எல்லைப்பிரச்சினை எப்பொழுதோ முடிவுக்கு வரவேண்டியது. காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் ராணுவத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியால் அது இன்னும் தொடர்கிறது.

நாட்டின் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சினையிலும் காங்கிரஸ் தலைவர்கள் நாட்டின் பக்கம் நிற்காமல் பிரதமரை சந்தேக கண்ணோட்டத்துடன் கேள்வி கேட்கிறார்கள். ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் நீங்கள் பிரதமரை இழிவுபடுத்துவதாக நினைத்து இந்திய ராணுவத்தையும் தேசத்தையும் இழிவு படுத்துகிறீர்கள்.

உங்களால் செய்யமுடியாததை மோடி செய்து கொண்டிருக்கிறார். இனிமேல் நீங்கள் ஆட்சிக்கு வரமுடியாது. ஆதலால் உண்மையை சொல்வதில் எனக்கு தயக்கமில்லை..

2008 ம் ஆண்டு விமானப்படை தளபதியாக பொறுப்பேற்ற போது நாட்டின் மிகவும் உயரமான விமானப்படை தளமாக தற்போது இருக்கும் தவ்லத் பெக் ஒல்டி விமானத்தளத்திட்டம் கடந்த 43 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்ததை அறிந்தேன்.

என்ன ஏது என்று முன்னாள் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது சீனாவிற்கு பயந்து நமது ஆட்சியாளர்கள் அந்த படைத்தளத்தை உருவாக்க அனுமதிக்கமாட்டார்கள். ஆனால் வருடந்தோறும் பட்ஜெட்டில் பணம்ஒதுக்கப்படும். ஆனால் பணம் நம் கைக்கு வராது என்று தெரிவித்தனர்.

ALSO READ:  அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

ஆதலால் இந்திய அரசாங்கத்துக்கு தெரியாமலயே அந்த விமானப்படைத்தளத்தை கட்டமைப்பது என்று முடிவு செய்தேன். வெற்றியும்கண்டேன். அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் AK ஆண்டனி க்கு கூட இந்த விஷயத்தை தெரியப்படுத்த வில்லை.

வேலையை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பின் சீன அரசாங்கம் சொல்லியே இந்திய அரசாங்கத்திற்கு இந்த விஷயம் தெரியும். நான் இந்தச்செயலை செய்ததற்காக சீனாவிடம் இந்திய அரசு உயர் அதிகாரிகள் (அப்போதைய நிதி அமைச்சர்) அந்த விமானப்படை தளத்தை ஒரு போதும் பயன்படுத்த மாட்டோம் என்று மன்னிப்பு கடிதம் எழுதி என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தனர்.

நான் கட்டியமைத்த தவ்லத் பெக் ஒல்டி விமானத்தளத்தை தற்போது இந்திய அரசு பயன்படுத்த அனுமதி வழங்கி அங்கிருந்து கல்வாண் பள்ளத்தாக்கிற்கு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு தான் சீன அரசு தற்போது எதிர்ப்பு காட்டி வருகிறது..

இது எப்போதோ செய்திருக்க வேண்டிய பணி. ஆனால் சீனா நம்மைத் தாக்கியிருக்கும். பதில் தாக்குதல் நடத்த இந்திய அரசாங்கமும் உத்தரவிடாது.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

இப்பொழுது சீனா பயப்படுகிறது என்றால் அது இந்திய ராணுவத்திற்கு மட்டுமே. அதற்கு காரணம் மோடி மட்டுமே…

12375 - 2026

http://www.bharat-rakshak.com/IAF/Database/12375

Related articles

Recent articles

spot_img