அரசனை நம்பி புருஷனை கைவிட்டு… நட்டாற்றில் நிற்கும் அதிமுக.,! 2021ல் கரைவது உறுதி!

Published:

arunkumar covai2 - 2026

இது என் மனதில் உள்ளதை எழுதுகிறேன்… உண்மையிலேயே இந்த அப்பாவி முகத்தை பார்க்கும் பொழுது மனதில் ஈரம் கசிகிறது.

அதர்மத்திற்கு எல்லையே இல்லையா. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இருக்க வேண்டிவர்கள் வெளியே நிறைய பேர் இருக்க அப்பாவி சிறுவன் தான் கிடைத்தானா எடப்பாடி அவர்களே ..!!?

#ஹிந்து கடவுள்கள் குறித்து வீரமணி பேசாததா,

ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசாததா,,

ஹிந்து கடவுள் குறித்து மனுசாபுத்திரன் எழுதாத கவிதையா,

ஹிந்து கோவில்கள் சாத்தானின் இருப்பிடங்கள் என்று ஒரு தற்குறி பேசாததா..

அப்போது எல்லாம் எங்கே இருந்திர்கள் எடப்பாடி அவர்களே

2019ஆண்டு இந்துக்களின் புனித கடவுளான பகவான் கிருஷ்ணரை வீரமணி அவதூறாக பேசியதற்காக வழக்கு பதிய பட்டு, நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் திக வீரமணி மீது எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டது… விசாரணை முடிவில் நீதிபதி திக வீரமணி எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை விரைந்து மேல் நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்,, இதற்கு நடவடிக்கை எடுக்க ஆண்மை உள்ளதா ?

தொடர்ந்து பாரத பிரதமரை இழிவுபடுத்தி செய்திகளை வெளியிடும் சுந்தரவல்லி மீது நடவடிக்கை எடுக்க ஆண்மை இருக்கிறதா?

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

தொடர்ந்து இந்தியாவை இழிவுபடுத்தி பேசும் திருமுருகன் காந்தி மீது நடவடிக்கை எடுக்க ஆண்மை இருக்கிறதா ?

இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா ?

arunkumar covai - 2026

பச்சிளம் குழந்தை, அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டமாம்
எடப்பாடி அவர்களே,,, ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள்….

ஒரு காலத்தில் கருணாநிதி வந்து விடக் கூடாது என்பதனால் எல்லா இந்துக்களும் ( பிஜேபி ஜெயுக்கவா போகிறது என்று ) அம்மாவுக்கு ஒட்டு போடுகிறார்கள் ,, கண்டிப்பாக அம்மா இந்துக்களுக்கு எதிரி இல்லை என்கிற எண்ணம் அனைத்து இந்துக்கள் மனதிலும் உண்டு.

அதே போல் ஒவ்வொரு இந்துவும் கருணாநிதி இந்துக்களின் எதிரி என்று நினைத்து ஒட்டளித்து வந்தார்கள்! உண்மையும் அதுதான்…

ஓட்டை பிஜேபிக்கு போட்டு, அந்த ஒட்டு வேஸ்ட் ஆகி கருணாநிதி வந்து விட கூடாது என்று இந்துக்களில் நிறைய பேர் அம்மாவுக்கு ஒட்டு போட்டார்கள். இது தான் இத்தனை ஆண்டு கள நிலவரம்… ஆனால் நீங்கள் எங்களை ஒரு மனுசனா கூட மதிக்கவில்லை!

கோவை அருண்குமார் மீது தேவையில்லாமல் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்கிற போது , நக்சலைட் ஆக உலா வரும் சுந்தரவல்லி மீது, வீரமணி மீது, திருமுருகன் காந்தி மீது நடவடிக்கை எடுக்க பயப்படுவது ஏன் ??

ALSO READ:  எல்லைக்கு உள்ளும் புறமும்... பிரதமரை குறி வைக்கும் அபாயம்!

பெயிண்ட் ஊத்தினா தடா என்றால் பிள்ளையார் சிலையை உடைத்த கூட்டத்தை என்ன செய்ய போகிறீர்கள்?!

யாரை திருப்திப் படுத்த இந்த நடவடிக்கை எல்லாம்.. இவ்வளவு பயந்து எதற்கு ஆட்சி செய்யணும்?

எந்த ஆட்சி நாட்டை எதிர்பார்க்காமல் ஓட்டை எதிர்பார்த்து நடக்கிறதோ அது சிறப்பானதாக இருக்க முடியாது அதற்கு உதாரணம் உங்கள் ஆட்சி எடப்பாடி அவர்களே!

காலம் எதையும் திருப்பித் தராமல் விடாது ,, இன்றைக்கு நீங்கள் அதிகாரத்தில் இருக்கலாம் இந்துக்களை ஒரு புழுவாக நினைக்கலாம் ஒரு நாள் இதே அம்பு உங்களுக்கு எதிராக திரும்பியே ஆகும்!

இந்துக்கள் முட்டாள்கள் அல்லர்… காலமும் 1967 அல்ல!

நீங்கள் யாரை திருப்தி செய்ய நினைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு வாக்களிக்கப் போவதில்லை! உங்களுக்காக பொது வெளியில் ஆதரிக்கவும் போவதில்லை!

அதிமுக அரசனை நம்பி புருஷனை கைவிட்டது.

காலம் காலமாக உங்களை அதாவது அதிமுகவை ஆதரித்த நபர்களை வேகமாக வெளியேறு என்று தள்ளுகிறீர்கள். திமுகவோடு நீங்கள் இணையப் போகும் காலம் வந்து விட்டது போல தோன்றுகிறது . எல்லாமே நன்மைக்கு என்று நினைப்பதைத் தவிர வேறு வழியில்லை ஆனால் இதற்கு நிச்சயம் காலம் பதில் சொல்லும்.

ALSO READ:  கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

உண்மையிலேயே இந்த அப்பாவி முகத்தை பார்க்கும் பொழுது மனதில் ஈரம் கசிகிறது. பார்க்கலாம் இந்த தமிழ்நாட்டை ஓநாய்களும், குள்ளநரியும் எவ்வளவு நாள் ஆளும் என்பதை பார்த்து விடுவோம் !

போதும் எடப்பாடி. 2021ல் ஆளுநர் ஆட்சி அமையட்டும்.

பிஜேபி தலைவர், ராஜா அவர்கள், KT ராகவன் அவர்கள்… அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்…. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட சிறுவன் அருணன் குடும்பத்திற்கு பாதுகாப்பாக இருந்து உதவுங்கள்

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் போட்டாச்சி உங்களால் என்னடா செய்ய முடியும் என்று நினைக்கும் இந்த அரசுக்கு பாடம் புகட்டுங்கள்! எதாவது செய்து அந்த சிறுவனுக்கு உதவுங்கள்.. இல்லை என்றால் நீங்கள் ஆட்சி அதிகாரம் செய்வதற்க்கே தகுதி இல்லை என்பது போல் உலகம் நினைக்கும்!

  • கலாவதி கலா (சமூக வலைதளப் பதிவு)

Related articles

Recent articles

spot_img