December 5, 2025, 5:11 PM
27.9 C
Chennai

கழிவுநீர் கலந்த தண்ணீரை குடிநீராக வழங்கும் சோழவந்தான் பேரூராட்சி!

cholavanthan water issue
cholavanthan water issue

சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்டது. 18 வார்டுகளை கொண்ட இந்த பேரூராட்சியின் மொத்த ஜனத்தொகை 30 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். இங்கு வசிக்கும் மக்களுக்கு வைகை ஆற்றில் குடிநீர் கிணறு 1974-75களில் அமைக்கப்பட்டு அதிலிருந்து தற்பொழுது வரை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இது முதல் மேல்நிலை தொட்டி ஆகும் பின்பு இரு மேல்நிலை தொட்டிகள் அமைக்கப்பட்டு விரிவாக்க பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டது நகரின் மையப்பகுதிக்கு என முதலில் அமைக்கப்பட்ட வடிகட்டி கிணறு இருந்து விட்ட நிலையில் ஆற்றில் வரும் நீரை நேரடியாக உறிஞ்சி தான் தற்பொழுது குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இது பாதுகாக்கப்பட்ட சுத்தமான சுகாதாரமான குடிநீர் இல்லை. ஏனெனில் கிட்டத்தட்ட 45 இடங்கள் கழிவுநீர் கால்வாயில் வரும் கழிவுநீர் நேரடியாக வைகையாற்றில் கலக்கப்படுகிறது. எனவே தண்ணீர் துர்நாற்றம் வீசுவதுடன் தேவையற்ற கழிவுகளுடன் வீடுகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

குறிப்பாக பேரூராட்சி நிர்வாகம் பல இடங்களில் கழிவுநீர் கால்வாய்களை அமைத்து அதில் வரும் கழிவுநீரை நேரடியாக வழிகாட்டி விடுவதுதான் கொடுமையான விஷயம். இந்த நிலையை மாற்றி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு வழங்க வேண்டும் எனில் புதிதாக கிணறு அமைக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கான திட்டம் தீட்டி அனுமதி பெற்று அமைப்பதற்கு சோழவந்தான் பகுதி மிகப்பெரிய நோய் மையமாக மாறி விடும் அவலம் உள்ளது.

இந்த நிலையை தவிர்த்து குறைந்த செலவில் சோழவந்தான் பேரூராட்சி மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வாய்ப்பு உள்ளது. மதுரை மாநகராட்சி1,2,3,வந்து கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தென்கரை கிராமம் நிலையூர் கால்வாய் பாலத்தின் அருகே முதல்கட்ட திட்டத்திலேயே சோழவந்தான் தண்ணீர் கொடுப்பதற்கு என குழாய் அமைத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே புதியதாக நிதி ஒதுக்கீடு செய்து திட்டம் செயல்படுத்த தேவையில்லாமல் நீட்டிக்கப்பட்டுள்ள குழாயில் இணைப்பை ஏற்படுத்தி குறைந்த செலவில் சுகாதாரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை சோழவந்தான் கிராம மக்களுக்கு வழங்க முடியும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என சோழவந்தான் பேரூராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories