கழிவுநீர் கலந்த தண்ணீரை குடிநீராக வழங்கும் சோழவந்தான் பேரூராட்சி!

cholavanthan water issue
cholavanthan water issue

சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்டது. 18 வார்டுகளை கொண்ட இந்த பேரூராட்சியின் மொத்த ஜனத்தொகை 30 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். இங்கு வசிக்கும் மக்களுக்கு வைகை ஆற்றில் குடிநீர் கிணறு 1974-75களில் அமைக்கப்பட்டு அதிலிருந்து தற்பொழுது வரை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இது முதல் மேல்நிலை தொட்டி ஆகும் பின்பு இரு மேல்நிலை தொட்டிகள் அமைக்கப்பட்டு விரிவாக்க பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டது நகரின் மையப்பகுதிக்கு என முதலில் அமைக்கப்பட்ட வடிகட்டி கிணறு இருந்து விட்ட நிலையில் ஆற்றில் வரும் நீரை நேரடியாக உறிஞ்சி தான் தற்பொழுது குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இது பாதுகாக்கப்பட்ட சுத்தமான சுகாதாரமான குடிநீர் இல்லை. ஏனெனில் கிட்டத்தட்ட 45 இடங்கள் கழிவுநீர் கால்வாயில் வரும் கழிவுநீர் நேரடியாக வைகையாற்றில் கலக்கப்படுகிறது. எனவே தண்ணீர் துர்நாற்றம் வீசுவதுடன் தேவையற்ற கழிவுகளுடன் வீடுகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

குறிப்பாக பேரூராட்சி நிர்வாகம் பல இடங்களில் கழிவுநீர் கால்வாய்களை அமைத்து அதில் வரும் கழிவுநீரை நேரடியாக வழிகாட்டி விடுவதுதான் கொடுமையான விஷயம். இந்த நிலையை மாற்றி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு வழங்க வேண்டும் எனில் புதிதாக கிணறு அமைக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கான திட்டம் தீட்டி அனுமதி பெற்று அமைப்பதற்கு சோழவந்தான் பகுதி மிகப்பெரிய நோய் மையமாக மாறி விடும் அவலம் உள்ளது.

ALSO READ:  குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

இந்த நிலையை தவிர்த்து குறைந்த செலவில் சோழவந்தான் பேரூராட்சி மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வாய்ப்பு உள்ளது. மதுரை மாநகராட்சி1,2,3,வந்து கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தென்கரை கிராமம் நிலையூர் கால்வாய் பாலத்தின் அருகே முதல்கட்ட திட்டத்திலேயே சோழவந்தான் தண்ணீர் கொடுப்பதற்கு என குழாய் அமைத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே புதியதாக நிதி ஒதுக்கீடு செய்து திட்டம் செயல்படுத்த தேவையில்லாமல் நீட்டிக்கப்பட்டுள்ள குழாயில் இணைப்பை ஏற்படுத்தி குறைந்த செலவில் சுகாதாரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை சோழவந்தான் கிராம மக்களுக்கு வழங்க முடியும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என சோழவந்தான் பேரூராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories