கழிவுநீர் கலந்த தண்ணீரை குடிநீராக வழங்கும் சோழவந்தான் பேரூராட்சி!

cholavanthan water issue
cholavanthan water issue

சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்டது. 18 வார்டுகளை கொண்ட இந்த பேரூராட்சியின் மொத்த ஜனத்தொகை 30 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். இங்கு வசிக்கும் மக்களுக்கு வைகை ஆற்றில் குடிநீர் கிணறு 1974-75களில் அமைக்கப்பட்டு அதிலிருந்து தற்பொழுது வரை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இது முதல் மேல்நிலை தொட்டி ஆகும் பின்பு இரு மேல்நிலை தொட்டிகள் அமைக்கப்பட்டு விரிவாக்க பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டது நகரின் மையப்பகுதிக்கு என முதலில் அமைக்கப்பட்ட வடிகட்டி கிணறு இருந்து விட்ட நிலையில் ஆற்றில் வரும் நீரை நேரடியாக உறிஞ்சி தான் தற்பொழுது குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இது பாதுகாக்கப்பட்ட சுத்தமான சுகாதாரமான குடிநீர் இல்லை. ஏனெனில் கிட்டத்தட்ட 45 இடங்கள் கழிவுநீர் கால்வாயில் வரும் கழிவுநீர் நேரடியாக வைகையாற்றில் கலக்கப்படுகிறது. எனவே தண்ணீர் துர்நாற்றம் வீசுவதுடன் தேவையற்ற கழிவுகளுடன் வீடுகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

குறிப்பாக பேரூராட்சி நிர்வாகம் பல இடங்களில் கழிவுநீர் கால்வாய்களை அமைத்து அதில் வரும் கழிவுநீரை நேரடியாக வழிகாட்டி விடுவதுதான் கொடுமையான விஷயம். இந்த நிலையை மாற்றி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு வழங்க வேண்டும் எனில் புதிதாக கிணறு அமைக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கான திட்டம் தீட்டி அனுமதி பெற்று அமைப்பதற்கு சோழவந்தான் பகுதி மிகப்பெரிய நோய் மையமாக மாறி விடும் அவலம் உள்ளது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

இந்த நிலையை தவிர்த்து குறைந்த செலவில் சோழவந்தான் பேரூராட்சி மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வாய்ப்பு உள்ளது. மதுரை மாநகராட்சி1,2,3,வந்து கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தென்கரை கிராமம் நிலையூர் கால்வாய் பாலத்தின் அருகே முதல்கட்ட திட்டத்திலேயே சோழவந்தான் தண்ணீர் கொடுப்பதற்கு என குழாய் அமைத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே புதியதாக நிதி ஒதுக்கீடு செய்து திட்டம் செயல்படுத்த தேவையில்லாமல் நீட்டிக்கப்பட்டுள்ள குழாயில் இணைப்பை ஏற்படுத்தி குறைந்த செலவில் சுகாதாரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை சோழவந்தான் கிராம மக்களுக்கு வழங்க முடியும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என சோழவந்தான் பேரூராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories