தீபாவளியின் போதுதான் ‘விடியல் அரசு’ இப்படி சதி செய்யணுமா?!

Published:

deepavali night lights
deepavali night lights

தீபாவளி பண்டிகையின் உற்சாகத்தை குறைக்க அடுத்த சதி.

ஏற்கனவே பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு, தீபாவளியன்று இந்த உணவுதான் சாப்பிட வேண்டும் என்று கட்டுப்பாடு, தீபாவளிக்கு வழிபாடு நடத்த கட்டுப்பாடு,

என்கிற வரிசையில் அடுத்ததாக இன்று புதிதாக கண்ணுக்குத் தெரியாமல் ஒரு விஷமத்தனத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் உதவியுடன் தமிழக அரசு செய்துள்ளது.

அதாவது தீபாவளி பண்டிகைக்கு தான் அனைத்து கடைகளும் ஜாதி மத பேதமின்றி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கும்,

கடைவீதிக்கு போனால் ஒரு உற்சாகம் பிறக்க சைக்காலஜிகல் ஆக இந்த வண்ண விளக்குகளும் ஒரு காரணம்.

இப்பொழுது அந்த லைட் எரிய விடுவதற்கு தனியாக மின் இணைப்பு பெற வேண்டும் இல்லை என்றால் மின்சார துண்டிப்பு அபராதம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பகிரங்கமாக மிரட்டி இருக்கிறார்கள்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் தீபாவளிக்கு 5 நாட்கள் தான் இருக்கும் நிலையில் அதற்குள் தனியாக மின்சார இணைப்புப் பெற முடியுமா?

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

வியாபாரத்தை முதலாளி பார்ப்பாரா மின்சார ஆபீஸ் வாசலில் காத்து கிடைப்பாரா, மின்னல் வேகத்தில் வேலை செய்து தரப் போவதில்லை.

இனி அதற்கு தனியாக செலவு செய்து மீட்டர் பொருத்தி மின் ஒயர் எடுத்து கம்பத்தில் கொடுப்பதற்கு எவ்வளவு செலவு செய்ய முடியும். ஆகவே வாய்ப்புள்ள கடைக்காரர்கள் ஜெனரேட்டர் மூலம் இணைப்பு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அதற்கு வசதி இல்லாதவர்கள் வண்ண விளக்குகளை கழட்டி வைத்து விட்டார்கள். இது தான் அவர்கள் எதிர்பார்த்தது.

ஹிந்து பண்டிகையின் உற்சாகத்தை குறைக்க வேண்டும் இந்த நாட்டில் ஹிந்துக்களுக்கு பண்டிகையே இல்லாமல் செய்ய வேண்டும் என்று ஒரு பெரும் கூட்டமே வேலை செய்து கொண்டிருக்கிறது.

அப்பொழுது தான் அவர்கள் நினைத்த மதமாற்றத்தை எளிதாக செய்ய இயலும்.

இனியும் நாம் நடுநிலைய வேஷம் போட்டுக்கொண்டே இருந்தால், விரைவில் நம் உண்மை நிலை இல்லாமல் போய்விடும்,

காஷ்மீர் பண்டிதர்கள் போல்!

Related articles

Recent articles

spot_img