சூத்திர சாமியின் பார்ப்பன பக்தன்!

09 June19 nadarajar - 2026

பார்ப்பனர்கள் எவராவது நம்ம சாமிகளைக் கும்பிடுகிறார்களா?” – இப்படி வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட  சமூக வலைத்தளங்களில் கேள்வியாக எழுப்பப் படுவது போல் பரப்பி வருகிறார்கள் சிலர்.

“உண்மையில் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பார்ப்பனக் குடும்பங்களுக்கு நாட்டார் தெய்வங்களே குல தெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் இருந்து வருகின்றன”.

“பிரபல கலை இலக்கிய விமர்சகர் வெங்கட்சாமிநாதனின் குல தெய்வம் தஞ்சை உடையாளூர் செல்ல மாகாளி அம்மன். முதல் பொங்கல் படையல் அவளுக்குதான். படையல் வைப்பது பூசாரிதான். குடும்பங்களில் வீட்டுக்கு ஒரு பெயர் ‘செல்ல’ என்று தொடங்கும்.”

“புதுக்கோட்டை அருங்காட்சியகக் கண்காணிப்பாளர் முத்து ஸ்ரீநிவாசன் வடகலை வைணவப் பார்ப்பனர். முத்து என்ற அவர் பெயரின் முன்னொட்டு குல தெய்வம் முத்து கருப்பசாமியை சுட்டுகிறது.”

“எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் மனைவி கமலா ராமசாமி தனது நூலில், தன் தந்தையார் மாடசாமி கோவில் கொடையில் ஆண்டுதோறும் கலந்து கொள்வதோடு, இவர் திருநீறு இட்டுவிட்ட பிறகுதான் சுவாமி மலையேறும் என்று குறிப்பிட்டுள்ளார்”.

ALSO READ:  குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

“நாடகாசிரியர் ‘கூத்துப் பட்டறை’ ந. முத்துசாமிக்கு குல தெய்வம் தஞ்சை மாவட்டம் ‘செண்டாடும் ஐயனார்’. தஞ்சையில் உள்ள ‘சிறைகாத்த ஐயனார்’ தான் தஞ்சை மாவட்டத்தில் பல பார்ப்பனக் குடும்பங்களுக்குக் குல தெய்வம்”

“சென்னை தரமணியில் வசிக்கும் பிராமணர் சுதர்சன ஹோமம், ம்ருத்யஞ்ஜய ஹோமம் போன்றவற்றை செய்து வைக்கிறார். அவர் பெயரே முனீஸ்வர சாஸ்திரிகள்.!”
(‘திராவிட இயக்கம் – புனைவும், உண்மையும் by மலர்மன்னன்/ கிழக்கு பதிப்பகம் – பக்கம் 70 & 71)

எனது வங்கி ஊழியர் நண்பர் பிராமணர். அவர் பெயர் முனியாண்டி. அவரது தகப்பனார் சாம்ப மூர்த்தி (அதாவது சுடலைப் பொடி பூசிய சிவன்). நிறையப் படியுங்கள் நண்பரே.

சும்மா எவனோ சொன்னதைக் கேட்டுகிட்டு… ‘பார்ப்பான் நம்ம சாமியைக் கும்பிட மாட்டான் – மாரியாத்தாளுக்கு சாமி வந்து ஆடும் பாப்பாத்தியைப் பார்த்தது உண்டா?- னு பேசிகிட்டு…

நம்மளுது சூத்திரச் சாமி/ ராமன் கிருஷ்ணன் எல்லாம் பார்ப்பனச் சாமி!-னு பேசிக்கிட்டு…

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

ராமன் சத்ரியன்: கிருஷ்ணன் யாதவன்! எங்களுக்குத் தெரிந்த ‘மாமி’ யே ஒருவர் ‘பெரியாண்டவன்’ படையல் நடந்தால் சாமி இறங்கி ஆடுவார்! எல்லாரும் எல்லா தெய்வங்களையும்தான் வழிபட்டனர்.

ஈரோட்டுக் கடைத்தெருவில் வாங்கி வந்து,(ஈவேரா) காஞ்சிபுரம் சந்தையில்(அண்ணாதுரை) பரப்பப்பட்ட இந்த வாதங்கள் போண்டியாகிப் பல நாள்கள் ஆகி விட்டன நண்பரே! கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’- மேலும் பல புரிதல்களை உருவாக்கும். ‘பார்ப்பான் வருவதற்கு முன் தமிழனுக்கு மதமே இல்லை’- போன்ற வாதங்களை ஆதாரபூர்வமாகக் கிழித்திருப்பார்!!

– முரளி சீதாராமன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories