March 27, 2025, 7:53 PM
28.9 C
Chennai

ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலினுக்கு கோயில் மரியாதை! தான் முதல்வர் ஆக அரங்கனை வேண்டிய குமாரசாமிக்கு ‘ஆச்சர்ய’ கேள்வி!

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள புகழ்பெற்ற வைணவத் தலைமைப் பீடமான திருவரங்கம் திருக்கோயில் வளாகத்துக்கு வந்த திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆலயத்தின் சார்பில் அர்ச்சகர்கள் திலகமிட்டு, மாலை அளித்து மரியாதை செய்தனர். ஸ்ரீரங்கம் கோயில் யானை அணிவித்த மாலையை ஆசையுடன் பெற்றுக் கொண்டார் ஸ்டாலின். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஆட்சியமைக்க தமிழ்நாட்டு கடவுளின் அருளைக் கோரிய குமாரசாமி, தமிழக மக்களின் வாழ்வாதாரம் குறித்து கவலைப்பட மறுப்பதாகக் கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

திருச்சி ஸ்ரீரங்கத்துக்கு, திமுக பிரமுகர்களின் இல்ல திருமண விழா மற்றும் காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக, திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வந்திருந்தார். இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் முன்னதாக, வரும் வழியில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் அவருக்கு கோவிலின் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. ஆலய பிரதான அர்ச்சகர் சுந்தர பட்டர் தலைமையில் மு.க.ஸ்டாலினுக்கு அரங்கனின் பிரசாதங்களான மாலை அணிவிக்கப் பட்டது. அப்போது மேள தாளங்கள் முழங்க அவருக்கு திலகமிட்டு வரவேற்பளித்தார் சுந்தர பட்டர். தொடர்ந்து, கோவில் யானை அவருக்கு மாலை அணிவித்தது.

அங்கிருந்து திமுக பிரமுகர்களின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகச் சென்ற ஸ்டாலின், நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஸ்டாலின், தொடர்ந்து 7 ஆண்டுகளாக ஜூன் மாதத்தில் மேட்டூரில் தண்ணீர் திறக்க முடியாத நிலை இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் தமிழக மக்களை பற்றி கவலைப் படாத ஆட்சி நடைபெற்று வருகிறது என்று குற்றம் சாட்டினார். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறுவதற்கு கண்டனம் தெரிவித்தார் ஸ்டாலின்.

விரைவில் சந்திக்க உள்ள தேர்தலில் தமிழ்நாட்டிற்கு விடிவு காலம் பிறக்கும் என்றார் அவர்.

இதனிடையே, மு.க.ஸ்டாலினின் ஸ்ரீரங்கம் ஆலய வருகை சமூக வலைத்தளங்களில் பலமாக எதிரொலித்தது. பலரும் அவருக்கு வழங்கப் பட்ட கோவில் மரியாதைகள் குறித்து கருத்துகளை எழுதியிருந்தனர். இருப்பினும் மரபின் படி அவருக்கு ஆலய மரியாதைகள் அளிக்கப் பட்டதை பலரும் வரவேற்றனர்.

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை, சுக்கிர வாரம், சுக்கிரப் ப்ரீதி என பரிகார பூஜைகள் செய்வதற்காகவும், சுக்கிர தலமான ஸ்ரீரங்கத்தில் கர்நாடக முதல்வர் ஆகியுள்ள குமாரசாமியைப் போன்று தானும் ஆக வேண்டும் என்ற வேண்டுதலை நிறைவேற்ற ஆலய வாசல் வரை வந்து பிரசாதங்களைப் பெற்றுச் சென்றார் என்று சிலர் கருத்து தெரிவித்தனர். ஸ்டாலினின் பகுத்தறிவு அவ்வளவுதான் என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.

ஆனால் தன்னை ஒரு பொதுவான நபராகக் கருதியிருந்தாரானால், பகுத்தறிவுக் கொள்கை பேசுபவராயிருந்தாலும் எந்த நம்பிக்கையில் குல்லா அணிந்து நோன்புக் கஞ்சி அருந்தி, கிறிஸ்துமஸ் கேக் வெட்டிக் கொண்டாடி உண்கிறாரோ அதே நம்பிக்கையில், ஆலயத்துக்குள்ளும் வந்து ஆலய மாலை மரியாதைகளைப் பெற்றிருக்க வேண்டும்! அந்த வகையில் மீண்டும் இந்து மதப் பழக்கங்களை சீண்டியிருக்கிறார் ஸ்டாலின் என்றே கருத இடம் இருக்கிறது. இத்தகையவர்கள் எப்படி முதல்வர் நாற்காலியில் அமர்ந்து எல்லோருக்கும் பொதுவானவர் என கூறிக் கொண்டு ஆட்சி செய்வார் என்ற கேள்வி எழுப்பப் படுவதை ஒதுக்கிவிட இயலாது!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்துக்களின் சொத்துகளை சட்ட விரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க துணைபோகும் திமுக., அரசு!

இந்துக்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க தமிழக அரசு துணை போவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

புதிய பாம்பன் பாலம் ஏப்.6ல் திறப்பு; வருகிறார் பிரதமர் மோடி!

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

பஞ்சாங்கம் மார்ச் 27 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: டி காக் அதிரடியில் கோல்கத்தா அணி வெற்றி!

          கொல்கொத்தா அணியின் மட்டையாளர், க்விண்டன் டி காக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Topics

இந்துக்களின் சொத்துகளை சட்ட விரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க துணைபோகும் திமுக., அரசு!

இந்துக்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க தமிழக அரசு துணை போவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

புதிய பாம்பன் பாலம் ஏப்.6ல் திறப்பு; வருகிறார் பிரதமர் மோடி!

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

பஞ்சாங்கம் மார்ச் 27 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: டி காக் அதிரடியில் கோல்கத்தா அணி வெற்றி!

          கொல்கொத்தா அணியின் மட்டையாளர், க்விண்டன் டி காக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

100 இந்துக் குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் குடும்பம் நிம்மதியாக வாழ முடியும்; ஆனால்…

100 இந்துக் குடும்பங்களுக்கு இடையே முஸ்லிம்கள் வசிக்க முடியும் ஆனால், 100 முஸ்லிம்களுக்கு மத்தியில் 50 ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது,'' என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு ஏப்.2ல் தொடக்கம்!

கூட்டம் மிகுதியான நாட்களில் பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள நேரடியாகவும் மற்றவர்கள் மேம்பாலம் வழியாகவும் சாமி தரிசனத்திற்கு

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

Entertainment News

Popular Categories